கேரளா: மே 3ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்

கேரளா: மே 3ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்

2 mins read
a33b6f60-42ce-4ba7-a9f6-7be89523d1a9
கேரளா, தமிழகம், புதுவையில் இரவு நேர ஊரடங்கு காரணமாக சாலைகள் வெறிச்சோடி உள்ளன. விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை பாயும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.படம்: ஊடகம் -

ஒரே நாள் பாதிப்பில் உச்சம்: புதிதாக 19 ஆயிரம் பேருக்கு கிருமித்தொற்று

திரு­வ­னந்­தபுரம்: கேர­ளா­வில் கொரோனா கிரு­மித்­தொற்­றுப் பாதிப்பு அதி­க­ரித்த நிலை­யில், அங்கு இரவு நேர ஊர­டங்கு அம­லுக்கு வந்­துள்­ளது.

கடந்த திங்­கட்­கி­ழமை இரவுமுதல் ஊர­டங்கு உத்­த­ரவு அமல்­ப­டுத்­தப்­பட்ட நிலை­யில், தேவை­யின்றி மக்­கள் வீடு­களை விட்டு வெளியே வர வேண்­டாம் என மாநில அரசு அறி­வு­றுத்தி உள்­ள­தாக 'தினத்­தந்தி' நாளேடு செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

கேர­ளா­வில் நேற்று முன்­தி­னம் ஒரே நாளில் புதி­தாக 19,577 பேருக்கு கிருமி தொற்­றி­யது உறு­தி­யா­னது. கொரோனா கிரு­மித்­தொற்று இந்­தி­யா­வில் பர­வத் தொடங்­கி­யது முதல் பதி­வான மிக அதி­க­பட்ச அன்­றாட பாதிப்பு எண்­ணிக்கை இது­வா­கும்.

பாதிக்­கப்­பட்­டோ­ரின் ஒட்டு­மொத்த எண்ணிக்கை 1.27 மில்­லி­யன் என்­றும் 118,673 பேர் மருத்­து­வ­ம­னை­களில் சிகிச்சை பெற்று வரு­வ­தா­க­வும் அம்­மா­நில சுகா­தா­ரத்­துறை தெரி­வித்­துள்­ளது.

அத்­து­றை­யின் அமைச்­ச­ரான ஷைல­ஜா­வின் மகன், மரு­ம­க­ளுக்கு கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­பட்­டதை அடுத்து அவர் தம்மை வீட்­டி­லேயே தனி­மைப்­படுத்­திக்கொண்­டுள்­ளார். இது குறித்து தமது சமூக வலைத்­த­ளப் பக்கத்தில் அவர் பதி­விட்­டுள்­ளார்.

கேர­ளா­வில் நேற்று முன்­தி­னம் மேலும் 28 பேர் கிரு­மித்­தொற்­றால் பலி­யா­கி­விட்ட நிலை­யில், உயி­ரி­ழந்­தோர் மொத்த எண்­ணிக்கை 4,978ஆக அதி­க­ரித்­துள்­ளது.

இது­வரை 1.14 மில்­லி­யன் பேர் கொவிட்-19 பாதிப்­பில் இருந்து முழு­மை­யாக மீண்­டுள்­ள­னர் என்று சுகா­தா­ரத்­துறை அறிக்­கை­யில் மேற்­கோள் காட்டி ஊட­கங்­கள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன.

மே 3ஆம் தேதி வரை இரவு நேர ஊர­டங்கு அம­லில் இருக்­கும் என்­றும் இரவு 9 மணி முதல் அதி­காலை 5 மணி வரை ஊர­டங்கு நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும் என்­றும் சுகா­தா­ரத்­துறை தெரி­வித்­துள்­ளது.