தண்டவாளத்தில் விழுந்த சிறுவன்: காப்பாற்றிய ஊழியருக்கு பாராட்டு

தண்டவாளத்தில் விழுந்த சிறுவன்: காப்பாற்றிய ஊழியருக்கு பாராட்டு

1 mins read
ffbcf229-4f6c-4848-9b78-45dc398feb4f
-

மும்பை: தண்­ட­வா­ளத்­தில் தவறி விழுந்த குழந்­தை­யைக் காப்­பாற்­றிய ரயில்வே ஊழி­ய­ருக்கு பாராட்­டு­கள் குவி­கின்­றன.

கடந்த 17ஆம் தேதி மகா­ராஷ்­டி­ரா­வில் உள்ள வாங்­கனி ரயில் நிலை­யத்­தில் தாயு­டன் ரயில் நிலைய தள­மே­டை­யில் நடந்து சென்ற ஆறு வயது சிறு­வன் கால் இடறி தண்­ட­வா­ளத்­தில் விழுந்­து­விட்­டான்.

அந்­நே­ரம் மின்­சார ரயில் ஒன்று வேக­மாக வரு­வ­தைக் கண்டு சிறு­வ­னின் தாயார் கடும் அதிர்ச்சி அடைந்­தார். சில நொடி­களில் சிறு­வன் மீது ரயில் மோதக்­கூ­டிய நிலை­யில், மயூர் ஷெல்கே என்ற ரயில்வே ஊழி­யர் மிக வேக­மாக ஓடி வந்து தண்­ட­வா­ளத்­தில் விழுந்த சிறு­வ­னைத் தூக்கி தள­மே­டை­யில் நிற்க வைத்­த­து­டன் தானும் விரை­வாக தள­மேடை மீது ஏறி­னார். அடுத்த நொடி மின்­சார ரயில் அந்த இடத்­தைக் கடந்து சென்­றது.

உயி­ரைப் பண­யம் வைத்து சிறு­வ­னைக் காற்­றிய மயூர் ஷெல்­கேவை பல்­வேறு தரப்­பி­ன­ரும் பாராட்டி உள்­ள­னர்.

"சிறு­வ­னின் தாயார் செய்­வ­த­றி­யா­மல் பத­றித் தவித்­த­தைக் கண்­ட­தும் உயி­ரைப் பண­யம் வைத்­தா­வது அந்தக் குழந்­தையை மீட்க வேண்­டும் என்று முடி­வெ­டுத்­தேன்," என்று மயூர் ஷெல்கே தெரி­வித்­துள்­ளார்.