மோடி: துணிச்சலை இழக்காதீர்

மோடி: துணிச்சலை இழக்காதீர்

1 mins read
1b0bb01f-1d2b-4503-8a60-f479b1f78cfb
-

புது­டெல்லி: கொரோனா கிரு­மித்­தொற்று இரண்­டா­வது அலை­யாக உரு­வெ­டுத்து வந்­தி­ருப்­ப­தாக பிர­த­மர் மோடி தெரி­வித்­துள்­ளார்.

நேற்று முன்­தி­னம் இரவு தொலைக்­காட்சி வழி நாட்டு மக்­க­ளி­டையே உரை­யாற்­றிய அவர், எத்­தனை சவால்­கள் இருந்­தா­லும் துணிச்­சலை ஒரு போதும் இழந்து விட வேண்­டாம் என்று குறிப்­பிட்­ட­தாக 'தினத்­தந்தி' நாளேடு தெரி­வித்­துள்­ளது.

பொது­மக்­கள் கவ­ன­மாக இருந்­தால் முழு ஊர­டங்கை மீண்­டும் அமல்­ப­டுத்த வேண்­டி­யது இல்லை என்று குறிப்­பிட்ட பிர­த­மர் மோடி, நோய் பாதிப்பு பகு­தி­களில் மட்­டுமே கட்­டுப்­பா­டு­கள் அவ­சி­ய­மா­கிறது என்­றார்.

கொரோனா கிரு­மித்­தொற்­றுக்கு எதி­ரான மிகப்­பெ­ரிய போரை நாடு மீண்­டும் நடத்தி வரு­கிறது என்­றும் கடந்த சில வாரங்­க­ளாக நிலைமை கட்­டுக்­குள் இருந்த நிலை­யில், கொரோனா இரண்­டா­வது அலை­யா­னது புயல்­போல வந்­து­விட்­டது என்­றும் பிர­த­மர் தெரி­வித்­தார்.

இடம் பெயர்ந்து வந்து வேலை பார்க்­கும் தொழி­லா­ளர்­கள், இந்த தொற்­றுப் பர­வ­லுக்கு மத்­தி­யில் சொந்த மாநிலங்­க­ளுக்குப் போகத் தேவை­யில்லை என்­றும் தொற்­றால் அவர்­க­ளது வேலை பாதிக்­காது என்­றும் பிர­த­மர் மோடி உறு­தி அ­ளித்­தார்.

"முன்னைவிட நம் மருத்­து­வர்­கள் நிபு­ணத்­து­வம் பெற்­றி­ருக்­கி­றார்­கள். இது­வரை இல்­லாத வகை­யில் உயிர்­க­ளைக் காப்­பாற்றி வரு­கி­றார்­கள்," என்று பிர­த­மர் மோடி தமது உரையில் மேலும் தெரிவித்தார்.