பிச்சை எடுத்தாவது மக்களைக் காப்பாற்றுங்கள்

பிச்சை எடுத்தாவது மக்களைக் காப்பாற்றுங்கள்

2 mins read
3fc50d1d-d735-40ca-ab6f-103969fe5d59
-

மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் வலியுறுத்து

புது­டெல்லி: டெல்­லி­யில் கொவிட்-19 தொற்று நோயா­ளி­க­ளுக்­குத் தேவைப்­படும் உயிர்­வ­ளி உருளைகளுக்கு (ஆக்­சிஜன் சிலிண்­டர்­கள்) கடு­மை­யான தட்­டுப்­பாடு ஏற்­பட்­டுள்ள நிலை­யில் மத்­திய அரசை மிக­வும் காட்­ட­மாக விமர்­சித்­துள்­ளது டெல்லி உயர் நீதி­மன்­றம். பிச்சை எடுங்­கள் அல்­லது திரு­டுங்­கள். எப்­பாடுபட்­டா­வது மக்­க­ளின் உயி­ரைக் காத்­தி­டுங்­கள் என மத்­திய அர­சைக் கண்­டித்­துள்­ள­னர் நீதி­ப­தி­கள்.

தலை­ந­கர் புது­டெல்­லி­யில் கொவிட்-19 நோயா­ளி­க­ளைக் காப்­பாற்ற உயிர்­வ­ளி உருளைக­ளுக்­குத் தட்­டுப்­பாடு ஏற்­பட்­டுள்­ளது. இதைச் சமா­ளிக்க உத்­த­ர­வி­டக் கோரி தாக்­கல் செய்­யப்­பட்ட மனுக்­கள் மீதான விசா­ரணை டெல்லி உயர் நீதி­மன்­றத்­தில் புதன்­கி­ழமை மாலை­யில் அவ­சர வழக்­காக விசா­ரிக்­கப்­பட்­டது.

நீதி­ப­தி­கள் விபின் சாங்வி, ரேகா ஆகி­யோர் அடங்­கிய அமர்வு இந்த மனுக்­களை விசா­ரித்­தது. புதன்­கி­ழமை இரவு 10 மணி­வரை நீடித்த விசா­ரணை நேற்­றும் தொடர்ந்­தது.

புதன்­கி­ழமை நடந்த விவா­தத்­தின்­போது "உயிர்­வ­ளிப் பற்­றாக்­கு­றை­யால் மக்­கள் உயி­ரி­ழப்­பதை அனு­ம­திக்க முடி­யாது. இதை உணர்­வு­பூர்­வ­மாக அணு­குங்­கள்.

தொழிற்­சா­லை­களில் இருந்து உயிர்வளிக் கலன்களை மருத்­து­வத் தேவைக்­குத் திருப்­பி­வி­டு­மாறு உத்­த­ர­வி­டு­கிறது இந்­நீ­தி­மன்­றம். மக்­கள் உயி­ருக்கே முன்­னு­ரிமை.

மத்­திய அர­சுக்கு மக்­கள் உயிர் மீது அக்­க­றை­யில்­லையா? என வின­வி­னர்.

மேலும், மத்­திய தொழில்துறை செய­லா­ளர் முன்­னி­லை­யா­கு­மாறு உத்­த­ர­விட்டு வழக்கை நீதி­ப­தி­கள் ஒத்­தி­வைத்­த­னர்.

வழக்கு மீண்­டும் விசா­ர­ணைக்கு வந்­த­போது மத்­திய அரசு சார்­பில் தலைமை வழக்­க­றி­ஞர் துஷார் மேத்தா, உயிர்­வ­ளித் தட்­டுப்­பாட்­டைச் சமா­ளிக்க உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும், அது­கு­றித்து டெல்லி முதல்­வர் அரவிந்த் கெஜ்­ரி­வா­லுக்­குத் தெரி­வித்­துள்­ள­தா­க­வும் விளக்­கி­னார். அதற்கு நீதி­ப­தி­கள், உயிர்­வளி தேவை ஐந்து மடங்கு அதி­க­ரித்­துள்­ளது.

இதைச் சமா­ளிக்க வேண்­டி­யது மத்­திய அர­சின் கடமை என்று கண்­டிப்­பு­டன் கூறி­னர்.

அப்­போது தலைமை வழக்­க­றி­ஞர் கூறு­கை­யில், இன்­னும் நேரம் கொடுத்­தால் மத்­திய அர­சின் கருத்­தைக் கேட்­டுக் கூற முடி­யும் என்­றார்.

அவ­ரின் இந்­தப் பதி­லால் அதி­ருப்­தி­ய­டைந்த நீதி­ப­தி­கள், நீங்­கள் உங்­க­ளுக்­குத் தேவை­யான இனி­மை­யான நேரத்­தைப் பொறு­மை­யாக எடுத்­துக்­கொள்­ளுங்­கள். மக்­கள் இங்கே மடிந்துகொண்டு இருக்­கட்­டும்.

"இப்­படி ஓர் இக்­கட்­டான நேரத்­தில் வேறெங்­கெல்­லாம் உயிர்­வளி இருக்­கி­றதோ அங்­கெல்­லாம் போய் பிச்சை எடுங்­கள், கட­னா­கக் கேளுங்­கள், இல்லை திரு­டுங்­கள்," என்று காட்­ட­மா­கத் தெரி­வித்­த­னர்.

பொறுப்­பைத் தட்­டிக் கழிப்­ப­தால் மக்­க­ளின் உயிர்­தான் பறி­போ­கும் என்று நீதி­ப­தி­கள் வேதனை தெரி­வித்­த­னர்.