ஆடம்பர வாகனத்தை விற்று கொரோனா நோயாளிகளின் உயிர்காக்கும் ஷாநவாஸ்

ஆடம்பர வாகனத்தை விற்று கொரோனா நோயாளிகளின் உயிர்காக்கும் ஷாநவாஸ்

2 mins read
11a8e2a4-ba2c-4736-befe-4e6308fa9909
மும்பையில் 'ஆக்சிஜன் மேன்' என்று அழைக்கப்படும் திரு ஷாநவாஸ் ஷேக். படம்: ஊடகம் -
multi-img1 of 2

மும்பை: நாட்­டில் கொரோனா நோயா­ளி­கள் எண்­ணிக்கை நாளுக்கு­நாள் அதி­க­ரிக்க நுரை­யீரல் பாதிப்­பி­னால் உயிர்­வளி (ஆக்­ஸி­ஜன்) தேவை நாளுக்கு நாள் அதி­க­ரிக்க மக்­கள் பெரும் உயிர் பிரச்­சி­னை­க­ளைச் சந்­தித்து வரு­கின்­ற­னர்.

மருத்­து­வ­ம­னை­களில் உயிர்­வளி கிடைக்­கா­மல் அதி­க­மான நோயா­ளி­கள் உயி­ரி­ழக்­கும் நிலை ஏற்­பட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில்­தான் மும்­பை­யில் வசிக்­கும் நல்ல உள்­ளம் படைத்த, 'ஆக்­ஸி­ஜன் மனி­தன்' என்று செல்­ல­மாக அழைக்­கப்­படும் ஷாந­வாஸ் ஷேக், தனது ரூ22 லட்­சம் பெறு­மான எஸ்.யு.வி. ஆடம்­ப­ரக் காரை விற்று உயிர்­வ­ளி உருளை (ஆக்­சிஜன் சிலிண்­டர்) வாங்கி கொரோனா நோயா­ளி­கள் உயிர்­பி­ழைக்க உதவி வரு­கி­றார்.

திரு ஷாநா­வாஸ், இதற்­காக கட்­டுப்­பாட்டு அறை ஒன்றை அமைத்து, அங்கு உதவி கோரி வரும் அழைப்­பு­க­ளுக்கு உத­வும் வகை­யில் உயிர்­வ­ளி உருளைகளை விநி­யோ­கித்து வரு­கி­றார்.

தனது ஃபோர்ட் எண்­ட­வர் காரை விற்று ஷாந­வாஸ் 160 உயிர்­வ­ளி உருளைகளை வாங்­கி­யுள்­ளார். இத­னைத் தேவை­யுள்­ள­வர்­க­ளுக்கு இல­வ­ச­மாக வழங்கி வரு­கி­றார்.

கடந்த ஆண்­டும் ஏழை மக்­க­ளுக்கு உத­வி­ய­தால் தன்­னி­டம் தற்­போது பணத்­தட்­டுப்­பாடு ஏற்­பட்டு தன் காரை விற்று சேவை செய்ய முடி­வெ­டுத்­த­தா­க­ திரு ஷாநவாஸ் கூறினார்.

ஊட­கம் ஒன்றுக்கு பேட்டியளித்த திரு ஷாந­வாஸ், தன் நண்­ப­ரின் மனைவி, உயிர்­வளி இல்­லா­மல் ஆட்­டோ­வி­லேயே மர­ண­ம­டைந்­தது தன்னை மனம் உடை­யச் செய்­து­விட்­டது என்­றார். அதன்பின் தான் இதுபோன்ற உயிர்காக்கும் பணியில் ஈடுபட்டதாகக் கூறினார்.

அர­சாங்­கத்தை எதிர்­பார்த்­துக் காத்­தி­ரா­மல் நல்ல உள்­ளம் படைத்த ஷாந­வாஸ் போன்ற கருணை உள்­ளம் படைத்த மனி­தர்­கள் தங்­க­ளால் இயன்ற உத­வி­யைச் செய்து வரு­கின்­ற­னர்.

மும்­பை­யில் உயிர்­வளி அளித்து உயிர்­காக்­கும் பணி­யில் தம்மை அர்ப்­ப­ணித்­துக்­கொண்ட இளை­யர் ஷாநா­வாஸ் போல் டெல்­லி­யில் உயிர்­காக்­கும் மனி­த­னாக சமூக சேவை­யில் ஈடு­பட்டு வரு­கி­றார் அசிம் உசேன் என்­கிற இளை­யர்.

இவர் 'Be Human' என்ற பெய­ரில் ஒரு தொண்­டூ­ழிய அமைப்பை நடத்தி வரு­கி­றார். இங்கு 150க்கு மேற்­பட்­டோர் அவ­ரது பணி­யில் உதவி வரு­கின்­ற­னர்.

இந்த அமைப்­பின் மூலம் இல­வச உயிர்­வளி வங்கி (ஃப்ரீ ஆக்­சிஜன் பேங்க்) ஒன்றை அமைத்து கொரோனா நோயா­ளி­க­ளுக்கு உதவி வரு­கி­றார். இவர் டெல்­லி­யின் தர்­யா­கஞ்ச் பகு­தி­யில் வசித்து வரு­கி­றார்.