மேற்குவங்கத்தில் 6ஆம் கட்ட தேர்தலிலும் வன்முறை

மேற்குவங்கத்தில் 6ஆம் கட்ட தேர்தலிலும் வன்முறை

2 mins read
931b8169-c9da-49f1-b13a-4e96b80ea3f9
-

கோல்­கத்தா: மேற்கு வங்­கத்­தில் ஆறாம் கட்ட வாக்­குப்­ப­திவு நடை­பெற்­றது. மேற்­கு­வங்க சட்­டப்­பே­ர­வைக்கு 8 கட்­டங்­க­ளா­கத் தேர்­தல் நடத்­தப்­ப­டு­கிறது.

ஏற்­கெ­னவே ஐந்துகட்­டத் தேர்­தல் முடி­வ­டைந்த நிலை­யில் நேற்று 6ஆம் கட்­ட­மாக வாக்­குப்­ப­திவு நடை­பெற்­றது. கொரோனா தடுப்பு வழி­காட்­டு­தல் நெறி­மு­றை­க­ளைப் பின்­பற்றி வாக்­குப்­ப­திவு நடந்து வரு­கிறது. இந்­தத் தேர்­த­லில் பதற்­ற­மான வாக்­குச்­சா­வ­டி­களில் பாது­காப்­புப் படை­கள் பணி­ய­மர்த்­தப்­பட்­டுள்­ளன. மேற்கு வங்­கத்­தில் எஞ்­சி­யுள்ள 2 கட்ட வாக்­குப்­ப­தி­வு­கள் முறையே வரு­கிற 26 மற்­றும் 29ஆம் தேதி­களில் நடை­பெ­று­கிறது.

மே 2ஆம் தேதி தமி­ழ­கம், கேரளா, புதுச்­சேரி, மேற்­கு­வங்­கம், அசாம் உள்­ளிட்ட ஐந்து மாநி­லத்­தேர்­த­லில் பதி­வான வாக்­கு­கள் அனைத்­தும் எண்­ணப்­பட்டு முடி­வு­கள் அறி­விக்­கப்­ப­ட­வுள்­ளன.

மேற்கு வங்கத்தில் முந்தைய தேர்தல்களைப் போல் இந்­தத் தேர்­த­லி­லும் மோதல், துப்­பாக்­கிச் சூடு என வன்­முறை சம்­ப­வங்­கள் அரங்­கேறின. 43 தொகு­தி­களில் காலை 7 மணிக்கு தொடங்­கிய வாக்­குப்­பதிவு, விறு­விறுப்­பாக நடை­பெற்றது. குனியா என்ற இடத்­தில் வாக்­குச் சாவ­டிக்கு முன்பு இரு குழுக்­கள் மோதிக் கொண்­ட­தால் பர­ப­ரப்பு ஏற்­பட்­டது. அதை­ய­டுத்து பாது­காப்­புப் படை­யி­னர் துப்­பாக்­கி­யால் வானில் சுட்டு அவர்­களை அப்­பு­றப்­ப­டுத்­தி­னர். அப்போது ஒரு வீட்­டில் துப்­பாக்­கிக் குண்­டு­கள் பட்டு சேதம் அடைந்­த­தால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. ராய்க்­குஞ் என்ற இடத்­தில் வாக்­காளர்கள் சிலர் சரி­யான அடை­யாள அட்­டையை காட்­டா­த­தால் வாக்­க­ளிக்க அனு­மதி மறுக்­கப்­பட்­டது. இத­னால் கோபமடைந்த அவர்கள் தேர்­தல் அலு­வ­லர் மீது தாக்­கு­தல் நடத்­தினர்.

பர்­கா­னாஸ் மாவட்­டத்­தில் பல இடங்­களில் திரி­ணா­முல் காங்­கி­ரஸ் மற்­றும் பாஜக தொண்­டர்­கள் இடையே மோதல் வெடித்­தது. கட்வா என்ற இடத்­தில் வாக்­குச் சாவடி முன்பு உடல்­ந­லம் பாதித்து மயக்­கம் அடைந்த பெண் ஒரு­வ­ருக்கு மத்­திய பாது­காப்­புப் படை வீரர்­கள் முத­லு­தவி அளித்­த­னர்.