செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
2b89df43-1543-4d17-96b5-8f189318d746
-

ஆசிஷ் யெச்­சூரி தொற்­றால் மர­ணம்

புது­டெல்லி: கொரோனா தொற்று பாதிப்­பால் மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்­சி­யின் அகில இந்­திய பொதுச் செய­லா­ளர் சீதா­ராம் யெச்­சூ­ரி­யின் மகன் ஆசிஷ் யெச்­சூரி (வயது 34) மர­ண­ம­டைந்­தார். இது­தொ­டர்­பாக சீதா­ராம் யெச்­சூரி தனது டுவிட்­டர் பக்­கத்­தில், "கொரோனா தொற்­றுக்கு எனது மூத்த மகன் ஆசிஷ் யெச்­சூ­ரியை இழந்­து­விட்­டேன் என்­பதை மிகுந்த வேத­னை­யோடு தெரி­வித்­துக்­கொள்­கி­றேன். "கடி­ன­மான நேரத்­தில் எங்­க­ளுக்கு நம்­பிக்கை ஊட்­டிய அனை­வ­ருக்­கும், என் மக­னுக்கு சிகிச்­சை­ய­ளித்த மருத்­து­வர்­கள், செவி­லி­யர்­கள், முன்­க­ளப் பணி­யா­ளர்­கள், தூய்­மைப் பணி­யா­ளர்­கள் அனை­வ­ருக்­கும் எனது நன்­றி­யைத் தெரி­வித்­துக் கொள்­கி­றேன்," எனத் தெரி­வித்­துள்­ளார்.

தடுப்­பூசி மருந்­து­கள் திருட்டு

சண்­டி­கர்: அரி­யானா மாநி­லம் ஜிண்ட் மாவட்­டத்­தில் உள்ள அரசு மருத்­து­வ­ம­னை­யில் 1,710 கொரோனா தடுப்­பூசி மருந்­து­கள் குளிர்­சா­தன சேமிப்பு கிடங்­கில் சேமித்து வைக்­கப்­பட்­டி­ருந்­தன. இவை 1,270 கொவி­ஷீல்டு மற்­றும் 440 கோவாக்­சின் தடுப்­பூசி மருந்­து­கள் ஆகும். இந்­நி­லை­யில், அங்­கி­ருந்து 1,710 தடுப்­பூசி மருந்­து­கள் திருட்டுப் போய்­விட்­ட­தாக மருத்­து­வ­மனை தெரி­வித்­துள்­ளது. நேற்று காலை வழக்­க­மான பணிக்­காக வந்த மருத்­து­வ­ம­னைப் பணி­யா­ளர், தடுப்­பூசி சேமிப்­புக் கிடங்­கின் கதவு திறக்­கப்­பட்டு தடுப்­பூ­சி­கள் திரு­டப்­பட்­ட­தைக் கண்டு அதிர்ச்­சி­ய­டைந்­தார். உட­ன­டி­யாக, மருத்­து­வ­மனை நிர்­வா­கம் இது­கு­றித்து காவல்­து­றைக்­குத் தக­வல் தெரி­வித்­தது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்­து­றை­யி­னர் தடுப்­பூ­சித் திரு­டர்­களை வலை­போட்­டுத் தேடி வரு­கின்­ற­னர்.

இல­வச தடுப்­பூ­சிக்கு கோரிக்கை

திரு­வ­னந்­த­பு­ரம்: மே 1ஆம் தேதி முதல் 18 வய­திற்கு மேற்­பட்ட அனை­வ­ருக்­கும் கொரோனா தடுப்­பூசி போடப்­படும் என்று மத்­திய அரசு அறி­வித்­தி­ருந்த நிலை­யில் கோவி­ஷீல்டு தடுப்பு மருந்­தின் விலையை அதி­க­ரித்து சீரம் நிறு­வ­னம் அறி­விப்பு வெளி­யிட்­டுள்­ளது. இதற்கு பல்­வேறு மாநி­லங்­களும் கடும் கண்­ட­னம் தெரி­வித்­துள்­ளன. இது­போன்ற நெருக்­கடி காலத்­தில் மத்­திய அரசுதான் மாநி­லங்­க­ளுக்கு மருந்­து­களை வழங்கவேண்­டும் என்று கேரள முத­ல்வர் பினராயி விஜ­யன் தெரி­வித்­துள்­ளார். உத்­த­ரப்­பி­ர­தே­சம், அசா­ம் தடுப்­பூசி இல­வ­ச­மா­கப் போடப்­படும் என அறி­வித்­துள்­ளன. அந்த வரி­சை­யில் இப்­போது கேர­ளா­வும் இணைந்­துள்­ளது. இதே­போல் மத்­திய பிர­தே­சம், பீகார், சட்டீஸ்­கர் மாநி­லங்­களும் தடுப்­பூசி இல­வ­சம் என அறி­வித்­துள்­ளன.