புதுடெல்லி: இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்குக் கடந்த 24 மணி நேரத்தில் 332,730 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 2,263 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் என்று இந்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் நேற்று 568 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் 306 பேரும், சத்தீஸ்கரில் 207 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 195 பேரும், குஜராத்தில் 135 பேரும், கர்நாடகாவில் 123 பேரும், ஜார்க்கண்டில் 106 பேரும், தமிழகத்தில் 59 பேரும் உயிரிழந்துள்ளனர்,
இதுவரை 27 கோடியே 44 லட்சத்து 45 ஆயிரத்து 653 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 17 லட்சத்து 40 ஆயிரத்து 550 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.