புதுடெல்லி: தொற்றால் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ள 11 மாநிலங்களின் முதல்வர்களுடன் நேற்று பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.
இதனையடுத்து அவர், முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். தொற்று கட்டுப்பாடுகளால் மக்கள் படும் சிரமத்தைக் குறைக்கும் வகையில் ரூ.26,000 கோடி செலவில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5 கிலோ உணவுத் தானியங்கள் இலவசமாக வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.

