உத்தரகாண்டில் மீண்டும் பனிச்சரிவு; எட்டுப் பேரின் சடலங்கள் மீட்பு

இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலம், சமோலி மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல் 23) பிற்பகல் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கியவர்களில் 384 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். பனிச்சரிவில் சிக்கிய எட்டுப் பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

சமோலி மாவட்டத்தில் நீதி வேலியை ஒட்டிய இந்திய, சீன எல்லைப் பகுதியருகே பனிச்சரிவு ஏற்பட்டது. நித்தி பள்ளத்தாக்கில் சும்னா சௌகி என்ற இடத்தைத் தாண்டிய ஓர் இடத்தில் பனிப்பாறைகள் சரிந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

விபத்து நிகழ்ந்த பகுதியில் சாலை அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அந்தப் பகுதியில் கடுமையான பனிப்பொழிவு நிலவுவதால் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள நிலைமை பற்றி உடனுக்குடன் தெரிந்துகொள்ள முடியவில்லை.

பனிச்சரிவு ஏற்பட்ட இடத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்ற மீட்புக் குழுவினர் விரைந்து செயல்பட்டு வருகின்றனர். முதல்கட்ட தகவலின்படி, 384 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் ஆறு பேர் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நள்ளிரவில் மோசமான வானிலை காரணமாக மீட்பு பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர் இன்று காலை மீண்டும் மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!