கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவிலும் ஆக உச்சமான மரண எண்ணிக்கை
வெள்ளிக்கிழமை பதிவானது. ஒரே நாளில் 124 பேர் மாண்டதால் அவர்களைத் தகனம் செய்ய தகனச்சாலைகளை மக்கள் அவசரமாக நாடவேண்டி இருந்தது. இதன் காரணமாக நகரில் இருக்கும் ஏழு கொவிட்-19 தகனச்சாலைகளும் இரவு பகல் என்று எந்நேரமும் இயங்குகின்றன. ஒவ்வொரு தகனச் சாலையிலும் தினமும் 20 முதல் 25 சடலங்கள் வரை எரியூட்டப்
படுகின்றன. இது வழக்கத்தைக் காட்டிலும் நான்கு மடங்கு அதிகம்.

