ஆக்சிஜன் பற்றாக்குறையைச் சமாளிக்க பஞ்சாப்பில் இரும்பு ஆலைகள் மூடல்

ஆக்சிஜன் பற்றாக்குறையைச் சமாளிக்க பஞ்சாப்பில் இரும்பு ஆலைகள் மூடல்

1 mins read
0bc0fde9-1910-4414-95dc-796f4a3324a2
மூச்சு விட சிரமப்படும் பெண் ஒருவருக்கு காரில் இருந்தபடியே காசியாபாத்தில் உள்ள குருத்வாராவில் இலவசமாக ஆக்சிஜன் கொடுக்கப்படுகிறது. -

பஞ்­சாப்­பில் ஆக்சிஜன் பற்­றாக்­குறையைச் சமாளிக்க, தொழிற்­சா­லை­களில் பயன்­ப­டுத்­தப்­படும் ஆக்சிஜனை மருத்­துவ பயன்­பாட்­டிற்­குத் திருப்­பும் வகை­யில் இரும்பு மற்­றும் எஃகு தொழிற்­சா­லை­களை மூட உத்­த­ர­விட்­டுப்பட்டுள்ளது.

ஆக்சிஜன் பற்­றாக்­குறை கார­ண­மாக அங்கு ஆறு பேர் உயி­ரி­ழந்­த­தை­ய­டுத்து இந்த முடிவு எடுக்­கப்­பட்­டுள்­ளது.

இரும்பு உலை­கள், இரும்பு மற்­றும் எஃகு பொருட்­களை வெட்டி வடி­வ­மைக்க தொழிற்­சா­லை­களில் எரி­வா­யு­வு­டன் பிரா­ண­வா­யு­வும் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது.

எனவே அவற்றை மருத்­துவ தேவைக்­குப் பயன்­ப­டுத்­தும் வகை­யில் மாநில முதல்­வர் அம­ரிந்­தர் சிங் இந்த உத்­த­ர­வைப் பிறப்­பித்­துள்­ளார்.

பஞ்­சாப்­பிற்கு ஒதுக்­கப்­பட்­டுள்ள பிரா­ண­வாயு தற்­போ­தைய சூழ­லில் போதாது என்­றும் இது­கு­றித்து மத்­திய அர­சு­டன் பேசி­யுள்­ள­தா­க­வும் அவர் சொன்­னார்.

அண்டை மாநி­லங்­க­ளைச் சேர்ந்த நோயா­ளி­க­ளின் வரு­கை­யால் பிரா­ண­வாயு தேவை பஞ்­சாப்­பிற்கு கூடு­தல் சுமையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது என்­றும் முதல்­வர் குறிப்­பிட்­டார்.

அமிர்­த­ச­ரஸ் நக­ரில் உள்ள நீல­கண்ட் மருத்­து­வ­ம­னை­யில் பிரா­ண­வாயு பற்­றாக்­கு­றை­யால் 2 பெண்­கள் உள்­பட 6 பேர் மாண்­ட­னர். இவர்­களில் ஐவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள்.