உத்தர பிரதேசத்தில் கொரோனா நோயாளிகளால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.
ஆனால் எந்த மருத்துவமனையிலும் ஆக்சிஜனுக்குத் தட்டுப்பாடு இல்லை என அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
யோகி ஆதித்யநாத் கூறுகையில், "உத்தர பிரதேசத்தில் எந்த தனியார் மற்றும் அரசு மருத்துவ
மனைகளிலும் ஆக்சிஜன் பற்றாக்குறை என்பதே கிடையாது.
"தற்போது பிரச்சினை என்னவென்றால், ஆக்சிஜனைப் பதுக்குவதும், கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதும்தான். அதை இரும்புக்கரம் கொண்டு முடிவுக்கு கொண்டு வருவோம்.
"முதல் அலையோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு கொரோனா 2வது அலையில் பாதிப்பு 30 மடங்கு அதிகரித்துள்ளது," என்றும் அவர் சொன்னார்.

