புதுடெல்லி: இந்தியாவில்
கொவிட்-19 தொற்றுகளும் மரணங்களும் ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை எட்டுவது ஒருபக்கம், கொவிட்-19 நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க போதுமான ஆக்சிஜன் இல்லாமல் ஏற்படும் மரணங்கள் இன்னொரு பக்கம் என திணறிக் கொண்டிருக்கின்றன இந்திய மருத்துவமனைகள்.
இந்நிலையில், 551 மருத்துவ பிராணவாயு உற்பத்தி நிலையங்கள் அமைப்பதற்கு பிரதமர் பாதுகாப்பு நிதியிலிருந்து நிதி ஒதுக்க பிரதமர் அலுவலகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த ஆலைகள் மாவட்ட அளவில் ஆக்சிஜன் தேவையைப் பெருமளவு ஈடு செய்யக்கூடும் என்பதால் விரைவில் செயல்பட வேண்டும் என்றும் பிரதமர் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.
சுகாதார, குடும்ப நல அமைச்சால் அடையாளம் காணப்படும் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும்.
"மாவட்ட தலைமையக அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை அமைப்பதன் அடிப்படை நோக்கம், பொது சுகாதார அமைப்பை மேலும் வலுப்படுத்துவதோடு, இந்த மருத்துவ
மனைகள் ஒவ்வொன்றிலும் ஆக்சிஜன் உற்பத்தி வசதி இருப்பதை உறுதி செய்வதுமாகும்.
"இதுபோன்று மருத்துவமனைக்குள்ளேயே ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் வசதியால் மருத்துவ
மனைகள் மற்றும் அந்த மாவட்டத்தின் அன்றாட ஆக்சிஜன் தேவை
களைப் பூர்த்தி செய்யலாம்," என்று பிரதமர் அலுவலக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

