கர்நாடகா: மருத்துவமனைகளை நாடுவோர் எண்ணிக்கை உயர்வு

கர்நாடகா: மருத்துவமனைகளை நாடுவோர் எண்ணிக்கை உயர்வு

2 mins read
d07fdb60-2c05-427d-9fbe-17043cac2c04
-

இந்­தி­யா­வில் கொரோனா கிருமித் தொற்­றால் பெரி­தும் பாதிக்­கப்­

பட்­டுள்ள டெல்லி, மகா­ராஷ்­டி­ரா­வைத் தொடர்ந்து கர்­நா­ட­கா­வி­லும் அன்­றாட கிரு­மித் தொற்று எண்­ணிக்­கை­யும் மர­ணங்­களும் புதிய உச்­சத்தை எட்­டி­யுள்­ளன.

கர்­நா­ட­கா­வில் நேற்று 17,342 புதிய கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­களும் 149 மர­ணங்­களும் பதி­வா­கின. இதை­ய­டுத்து பாதிக்­க­ப் பட்­டோர் எண்­ணிக்கை அங்கு 13 லட்­சத்­தைக் கடந்­தது.

இத­னால் மருத்­து­வ­ம­னை­களில் சிகிச்சை பெறு­வோர் எண்­ணிக்­கை­யும் மள­ம­ள­வென்று உயர்ந்து வரு­கிறது. தற்­போது 234,483 பேர் சிகிச்சை பெற்று வரு­வ­தால் ஆக்சிஜன் தேவை­யும் அதி­க­ரித்­து

உள்­ளது.

இவர்­களில் 1,280 பேர் அவ­சர சிகிச்சை பிரி­வில் உள்­ள­னர். அவ­சர சிகிச்சை பிரி­வில் இல்­லாத நோயா­ளி­கள் பல­ருக்­கும்கூட ஆக்சிஜன் தேவை உள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இந்த தக­வல்­க­ளின் அடிப்­ப­டை­யில், தற்­போ­தைய ஆக்சிஜன் தேவை 54.5 விழுக்­கா­டாக உயர்ந்­துள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது. கிரு­மித்­தொற்­றின் முதல் அலை­யின் போது இது 41.1 விழுக்­கா­டாக இருந்­தது.

தற்­போது, மக்­கள் மூச்­சுத் திண­ற­லோ­டும் ஆக்சிஜனைக் குறை­வாக உள்­ளி­ழுக்­கும் திற­

னோ­டும்­தான் மருத்­து­வ­மனை

களை நாடு­கி­றார்­கள்.

ஆக்சிஜன் மற்­றும் மருத்­து­வ­

ம­னை­யில் படுக்­கை­கள் பற்­றாக்­குறை ஆகி­யன மக்­கள் மத்­தி­யில் பீதியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

ஆக்சிஜன் தட்­டுப்­பாடு நில­வும் நக­ர­மாக உரு­வெ­டுத்­துள்ள பெங்­க­ளூ­ரு­வில் அதற்கான தேவை ஐந்து மடங்கு அதி­க­ரித்­துள்­ள­தாக பிர­பல மருத்­து­வ­மனை ஒன்­றின் மருத்­து­வர்­கள் கூறி­யுள்­ள­னர்.

இதற்­கி­டையே, கர்­நா­ட­கா­வில் ஒவ்­வொரு சதுர கிலோ­மீட்­ட­ருக்­கும் 300 கொவிட்-19 நோயா­ளி­கள் உள்­ள­தாக ஜீவன் ரக்‌ஷா எனும் பொது சுகா­தார அற­நி­று­வ­னத்­தின் பகுப்­பாய்வு கூறு­கிறது.

கர்­நா­ட­கா­வில் இருக்­கும் மொத்த தொற்று எண்­ணிக்­கை­யில் 50 விழுக்­காடு பெங்­க­ளூ­ரு­வில் உள்­ள­தா­க­வும் பகுப்­பாய்­வில் தெரிய வந்­துள்­ளது.

"மேலும் கிரு­மிப்­ப­ர­வ­லுக்­கும் ஒரு சதுர கிலோ மீட்­ட­ருக்கு வாழும் மக்­க­ளின் எண்­ணிக்­கைக்­கும் தொடர்பு உள்­ளது.

"வூஹான், பெங்­க­ளூரு இரு நக­ரங்­க­ளின் மக்­கள்­தொ­கை­யும் கிட்­டதட்ட ஒன்று.

"ஆனால் வூஹா­னின் நிலப்­ப­ரப்­பை­விட பெங்­க­ளூரு எட்டு மடங்கு சிறி­யது.

"ஆகவே மக்­கள் அடர்த்தி அதி­க­மாக உள்­ள­தால் கிரு­மித்­தொற்­றும் அதி­க­மாக இருக்­கும்," என்று விளக்­க­ம­ளித்­தார் கொவிட்-19க்கான மாநில தலைமை மருத்­து­வர் மஞ்­சு­நாத்.