மும்பையில் கிருமித்தொற்று 15 விழுக்காடு குறைந்தது

மும்பையில் கிருமித்தொற்று 15 விழுக்காடு குறைந்தது

1 mins read
5d2d3600-6b69-4e44-ad01-4c4dff0acf1f
-

மும்பை: இந்­தி­யா­வில் கொரோனா தொற்று அதி­க­மாக காணப்­படும் மாநி­லங்­களில் முத­லி­டத்­தில் இருந்த மகா­ராஷ்­டி­ரா­வின் மும்பை நக­ரில் தற்­போது தொற்­றுக்கு ஆளா­வோர் எண்­ணிக்கை படிப்­ப­டி­யாக குறை­யத் தொடங்­கி­யுள்­ளது.

மும்­பை­யில் ஒரு­நாள் கொரோனா பாதிப்பு பல நாட்­க­ளாக 10 ஆயி­ரத்­தைத் தாண்டி பதி­வாகி அதிர்ச்சி அளித்து வந்­தது. இதை­ய­டுத்து, கட்­டுப்­பா­டு­கள் தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்­டன.

இந்த நிலை­யில், கடந்த மூன்று நாட்­க­ளாக தொடர்ந்து புதி­தாக தொற்­றுக்கு ஆளா­வோர் எண்­ணிக்கை படிப்­ப­டி­யா­கக் குறைந்து வரு­கிறது. கடந்த வியா­ழன்று 7,400 பேர் பாதிக்­கப்­பட்­டி­ருந்த நிலை­யில் தற்­போது பாதிக்­கப்­ப­டு­வோர் எண்­ணிக்கை குறைந்து வரு­கிறது. நேற்று முன்­தி­னம் 5,888 பேர் கிரு­மித்­தொற்­றுக்கு ஆளா­கி­னர். கடந்த 24 மணி நேரத்­தில் மும்­பை­யில் கொரோனா தொற்­றுக்கு ஆளா­ன­வர்­கள் எண்­ணிக்கை 5,888ஆக இருந்­தது.

ஒரு நாளில் சரா­ச­ரி­யாக 40 ஆயி­ரம் பேருக்கு கிரு­மித்­தொற்று பரி­சோ­தனை செய்­யப்­ப­டு­கிறது. தற்­போது பரி­சோ­தனை எண்­ணிக்­கை­யும் நாளுக்கு நாள் அதி­க­ரித்து வரு­கிறது. தொற்­றுக்கு ஆளா­வோர் எண்­ணிக்கை 15 விழுக்­காடு குறைந்­துள்­ளது மக்­க­ளுக்­குச் சற்று ஆறு­தலை அளித்­துள்­ளது.