'அரசியலை ஒதுக்கி வைத்து விட்டு மக்களுக்கு உதவுங்கள்'

'அரசியலை ஒதுக்கி வைத்து விட்டு மக்களுக்கு உதவுங்கள்'

1 mins read
57e13e5e-c8ff-44d6-9852-4e6d5591737c
-

புது­டெல்லி: அர­சி­யல் பணியை ஒதுக்கி வைத்து விட்டு மக்­க­ளுக்கு உத­வு­மாறு காங்­கி­ரஸ் கட்­சி­யின் தொண்­டர்­க­ளுக்கு ராகுல் காந்தி வேண்­டு­கோள் விடுத்­துள்­ளார்.

கொரோனா சூழலை மத்­திய அரசு சரி­வர கையா­ள­வில்லை என காங்­கி­ரஸ் கட்சியின் ராகுல் காந்தி விமர்­சித்து வரு­கி­றார்.

இந்­நி­லை­யில், பிர­த­ம­ரின் மன் கி பாத் உரை மற்­றும் கொரோனா விஷ­யத்­தில் மத்­திய அர­சின் அணு­கு­மு­றையை விமர்­சிக்­கும் வகை­யில், காங்­கி­ரஸ் தலை­வர் ராகுல் டுவிட்­ட­ரில் வெளியிட்டு

உள்ள பதிவில், "சிஸ்­டம் தோல்வி அடைந்­து­விட்­டது. எனவே, 'ஜன் கி பாத்' முக்­கி­யம். இந்த சிக்­க­லான நேரத்­தில் தேசத்­துக்கு பொறுப்­புள்ள குடி­

மக்கள் அவ­சி­யம்.

காங்­கி­ரஸ் கட்­சி­யில் உள்ள என்­னு­டைய நண்­பர்­க­ளி­டம் நான் கேட்­பது என்­ன­வென்­றால், உங்­க­ளின் அர­சி­யல் பணியை ஒதுக்­கி­வைத்து, உத­விக்­காக தவிக் கும் மக்­க­ளுக்கு உத­வுங்­கள். இது­தான் காங்­கி­ரசின் தர்­மம்," என தெரி­வித்­துள்­ளார்.