தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நாடு முழுவதும் தற்காலிக மருத்துவமனைகள் ஆக்சிஜன், படுக்கை வசதிகளுடன் கூடிய சிகிச்சை மையங்கள்; திருட்டுத்தனமாக மருந்து விற்ற மருத்துவர் உள்ளிட்ட நால்வர் கைது

2 mins read
e6f1135a-bffa-441d-8eb7-f46f49d7d89c
-

புது­டெல்லி: இந்­தி­யா­வில் சென்ற ஆண்­டில் கொவிட்-19 தொற்று தலை­காட்­டி­ய­போது பல மாநி­லங்­களி­லும் அமைக்­கப்­பட்ட சிறப்பு கொவிட்-19 நிலையங்­கள், 2வது அலை ஏற்­ப­டு­வ­தற்கு முன்­பா­கவே ஒன்­றன்பின் ஒன்­றாக மூடப்­பட்­டன.

இந்த நிலை­யில், இந்­தி­யா­வில் 2வது கொவிட்-19 அலை படு­மோ­ச­மாக மிரட்டுவதால் நாடு முழு­வ­தும் கொரோனா மருத்­து­வ­ம­னை­களை ராணுவ தள­வாட நிறு­வ­னங்­கள் விரைவாக அமைத்து வரு­கின்­றன.

கர்­நா­ட­கா­வின் பெங்­க­ளூரு, ஒடி­சா­வின் கோரா­புட், மகா­ராஷ்­டி­ரா­வின் நாசிக், உத்­த­ரப்­பி­ர­தே­சத்­தின் லக்னோ ஆகிய நகர்­களில் அத்­த­கைய நிலையங்­கள் செயல்­பட்டு வரு­கின்­றன. அல்­லது அமைக்­கப்­பட்டு வரு­கின்­றன.

தமிழ்­நாடு, மகா­ராஷ்­டிரா, மேற்கு வங்­காளம், மத்­தியப்பிர­தே­சம், உத்­தரப்பிர­தே­சம், ஒடிசா மற்­றும் உத்­த­ர­காண்­டில் தள­வா­டங்­கள் தொழிற்­சாலை வாரி­யத்­திற்­குச் சொந்­த­மான 25 இடங்­களில் ஆக்சிஜன், படுக்கை வச­தி­க­ளு­டன் கூடிய கொரோனா சிகிச்சை மையங்­களை ஹிந்­துஸ்­தான் ஏரோநாட்­டிக்ஸ் நிறு­வ­னம் அமைத்­துள்­ள­தாகத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

பாரத் டைன­மிக்ஸ் நிறு­வ­னம், பிஇ­எம்­எல் நிறு­வ­னம், ஹிந்­துஸ்­தான் ஏரோ­நாட்­டிக்ஸ் நிறு­வ­னம் உள்­ளிட்ட ராணுவ பொதுத்­துறை நிறு­வ­னங்­கள், ஆக்சிஜனை, ஆலை­களில் இருந்து அரசு மருத்­து­வமனைக­ளுக்கு அதிகமாக கொள்­மு­தல் செய்கின்றன.

இத­னி­டையே, 10% தொற்­று­கள் தெரி­ய­வந்­தால் அந்த மாவட்­டங்­களில் ஊர­டங்கு, 50% ஊழி­யர்­களுக்கு மட்­டும் அலு­வ­லகங்­களில் அனு­மதி போன்ற தீவி­ர­மான நட­வடிக்­கை­களை உட­னடியாக எடுக்­கும்­படி மாநி­லங்­க­ளுக்கு மத்­திய அரசு உத்­த­ர­விட்­டுள்­ளது.

இவ்­வே­ளை­யில், மர­ணங்­கள் அதி­க­மாக இருந்­து­வ­ரும் குஜ­ராத் மாநி­லத்­தில் தீவி­ர­மான கொரோனா நோயா­ளி­க­ளுக்குப் பயன்­ப­டுத்­தும் ரெம்­டெ­சி­விர் மருந்து ரக­சி­ய­மாக கள்­ளச்­சந்­தை­யில் விற்­கப்­படுவதாக தக­வல்­கள் வெளி­யாகி அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்தி உள்ளன.

இந்­தச் சட்­ட­வி­ரோத காரி­யம் தொடர்­பில் ஒரு மருத்­து­வர் உட்­பட நால்­வர் பிடி­பட்­டுள்­ள­தாக ஊடகங்­கள் குறிப்­பிட்­டன.

இத­னி­டையே, ஆந்­திர மாநி­லம் விஜ­ய­ந­க­ரத்­தில் அரசு மருத்­து­வ­மனை­யில் ஆக்­சி­ஜன் தட்­டுப்­பாட்­டால் கொரோனா நோயா­ளி­கள் நால்­வர் நேற்று உயி­ரி­ழந்­த­தாக தக­வல்­கள் கூறின. நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக 93,000 ரயில்வே ஊழியர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தில் பராபங்கி என்ற ஊரில் உள்ள மருத்துவமனை யில் நேற்று பிறந்த இரட்டைக் குழந்தைகள் ஆக்சிஜன் இன்றி மாண்டுவிட்டன. மகாராஷ்டிராவில் யவத்மால் மாவட்டம் அம்டி கிரா மத்தில் கொரோனா சிகிச்சை மையத்தில் இருந்து 20 நோயாளிகள் தப்பி ஓடிவிட்டதாகவும் ஊடகங்கள் தெரிவித்தன.