திணறும் தலைநகர்: அன்றாட பாதிப்பு எண்ணிக்கை 25,000

திணறும் தலைநகர்: அன்றாட பாதிப்பு எண்ணிக்கை 25,000

3 mins read
57c415ec-e4ba-4f25-9977-3a9c97ff6b5a
கொரோனா பலி எண்ணிக்கை அதிகரிப்பதால் சவப்பெட்டிகளின் தேவை அதிகரித்துள்ளது. ஹைதராபாத்தில் உள்ள கடையில் சவப்பெட்டி தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள். படம்: ஏஎஃப்பி -

மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் பாதிப்பு அதிகரிப்பு

புது­டெல்லி: நாடு முழு­வ­தும் கொரோனா இரண்­டா­வது அலை கடும் பாதிப்­பு­களை ஏற்­ப­டுத்தி வரும் நிலை­யில் டெல்­லி­யில் அன்­றா­டம் பதி­வா­கும் புது நோயா­ளி­க­ளின் எண்­ணிக்கை 25 ஆயி­ரத்­தை நெருங்கிவிட்டது.

இதே­போல் மகா­ராஷ்­டிரா, கர்­நா­டகா உள்­ளிட்ட மாநி­லங்­க­ளி­லும் தொற்று பாதிப்பு அதி­க­ரித்து வரு­வ­தாக 'இந்­துஸ்­தான் டைம்ஸ்' இணை­ய­த்த­ளச் செய்தி தெரி­விக்­கிறது.

டெல்­லி­யில் நிலை­மை­யைக் கட்­டுக்­குள் கொண்­டு­வர தீவிர நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வ­தாக அம்­மா­நில முதல்­வர் கெஜ்­ரி­வால் தெரி­வித்­துள்­ளார்.

இந்­நி­லை­யில் நேற்று முன்­தி­னம் ஒரே­நா­ளில் அங்கு 24,149 பேர் புதி­தாக கிரு­மித்­தொற்­றுக்கு ஆளா­கி­யுள்­ள­னர். ஒரே நாளில் 351 பேர் மாண்­டு­விட்­டதை அடுத்து ஒட்­டு­மொத்த மரண எண்­ணிக்கை 15 ஆயி­ரத்­தைக் கடந்­துள்­ளது. சுமார் 98 ஆயி­ரம் பேர் மருத்­து­வ­ம­னை­களில் சிகிச்சை பெற்று வரு­வ­தாக மத்­திய சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

டெல்­லி­யில் உள்ள மருத்துவ­ மனை­களில் போது­மான படுக்­கை­கள் இல்­லா­த­தால் மாற்று ஏற்­பா­டு­களை மாநில அரசு செய்து வரு­கிறது. டெல்லி ராம்­லீலா திட­லில் 1,000 படுக்­கை­கள் கொண்ட கொரோனா அவ­சர சிகிச்சை மையத்தை அமைக்க உள்­ளது டெல்லி அரசு. அத்­தி­ட­லில் ஏற்­கெ­னவே 200 படுக்­கை­கள் கொண்ட அவ­ச­ரப் பிரிவு செயல்­படு­கிறது.

எதிர்­வ­ரும் மே 10ஆம் தேதிக்­குள் அனைத்து படுக்­கை­களும் தயாராகிவிடும் என முதல்­வர் கெஜ்­ரி­வால் தெரி­வித்­துள்­ளார்.

மகா­ராஷ்­டிரா நில­வ­ரம்

இதற்­கி­டையே மகா­ராஷ்­டி­ரா­வில் அன்­றா­டம் பதி­வா­கும் பாதிப்­புச் சம்­ப­வங்­க­ளின் எண்­ணிக்கை மீண்­டும் அதி­க­ரித்­துள்­ளது. திங்­கட்­கி­ழமை 48,700 ஆக இருந்த எண்­ணிக்கை செவ்­வாய்க்­கி­ழமை 66,358ஆக கூடி­விட்­டது. மும்­பை­யில் புதி­தாக 4 ஆயி­ரம் பேர் பாதிக்­கப்­பட்ட நிலை­யில் 59 பேர் உயி­ரி­ழந்துவிட்­ட­னர்.

இந்­நி­லை­யில் மகா­ராஷ்­டி­ரா­வில் கொரோ­னா­வுக்­குப் பலி­யான 22 பேரின் உடல்­கள் ஒரே ஆம்­பு­லன்­சில் மயா­னத்­துக்­குக் கொண்டு செல்­லப்­பட்­டது சர்ச்­சையை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

பீத் மாவட்­டத்­தில் உள்ள அர­சுக் கல்­லூரி மருத்­து­வ­ம­னை­யில் இந்த உயி­ரி­ழந்த 22 பேரும் சிகிச்சை பெற்று வந்­த­னர்.

இந்­நி­லை­யில் போது­மான ஆம்­பு­லன்­சு­கள் இல்­லா­த­தால் உயி­ரி­ழந்த 22 பேரின் உடல்­களை ஒரே ஆம்­பு­லன்­சில் கொண்டு செல்­ல­வேண்­டிய நிலைமை ஏற்­பட்­ட­தாக மருத்­து­வ­மனை நிர்­வா­கம் தெரி­வித்­துள்­ளது.

கர்நாடகா நிலவரம்

இதற்­கி­டையே கர்­நா­ட­கா­வின் கோலார் பகு­தி­யில் உள்ள அரசு மருத்­து­வ­ம­னை­யில் ஆக்­ஸி­ஜன் பற்­றாக்­குறை கார­ண­மாக 8 கொரோனா நோயா­ளி­கள் மூச்­சுத் திணறி உயி­ரி­ழந்­த­தாக தினத்­தந்தி செய்தி தெரி­விக்­கிறது.

அம்­ம­ருத்­து­வமனை­யில் உள்ள அவ­சர சிகிச்­சைப் பிரி­வில் 20 நோயா­ளி­கள் சிகிச்சை பெற்று வந்­த­னர். நேற்று முன்­தி­னம் இரவு ஆக்­சி­ஜன் தட்­டுப்­பாடு ஏற்­பட்­டதை அடுத்து எட்டு நோயா­ளி­கள் உயி­ரி­ழந்துவிட்­ட­னர்.

இதே­போன்ற சம்­ப­வம் உத்தரப்பிர­தே­சத்­தி­லும் நிகழ்ந்­துள்­ளது. அங்குள்ள அரசு மருத்­து­வ­ம­னை­யில் போது­மான ஆக்­சி­ஜன் இல்­லா­த­தால் 7 நோயா­ளி­கள் பலி­யா­கி­னர்.

இந்­நி­லை­யில் கர்­நா­ட­கா­வில் கொரோனா நோயா­ளி­க­ளுக்­காக 1,100 பேர் கொண்ட உதவி மையம் ஒன்றை அமைக்க அம்­மா­நில அரசு முடிவு செய்­துள்­ள­தாக சுகா­தார அமைச்­சர் சுதா­கர் தெரி­வித்­துள்­ளார்.

கர்­நா­ட­கா­வில் நாள்­தோ­றும் புதி­தாக 30 ஆயி­ரம் பேர் கிரு­மித் தொற்­றுக்கு ஆளாகி வரு­கின்­ற­னர். தலை­ந­கர் பெங்­க­ளூ­ரு­வில் நிலைமை மோச­மாக உள்­ள­தாக ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன. அங்கு முழு ஊர­டங்கு அமுல்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில் 20 கோடி ரூபாய் செல­வில் உதவி மையம் ஒன்றை அமைக்க கர்­நா­டக அரசு முடிவு செய்­துள்­ளது. அங்கு ஏற்­கெ­னவே 400 பேர் பணி­யாற்­றும் உதவி மையம் ஒன்று செயல்­பட்டு வரு­கிறது.

மேலும் பெங்­க­ளூ­ரு­வில் மூவா­யி­ரம் படுக்­கை­கள் கொண்ட தற்­கா­லிக கொரோனா சிகிச்சை மையம் அமைக்­கப்­படும் என்­றும் அமைச்­சர் சுதா­கர் தெரி­வித்­துள்­ளார்.