ஜெனிவா: இந்தியாவில் பெருகிவரும் கொரோனா தொற்றுக்குக் காரணம் எனக் கருதப்படும் உருமாறிய கொரோனா கிருமி 17 நாடுகளில் இருப்பதாக நேற்று முன்தினம் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தது.
முதலில் இந்தியாவில் கண்டறியப்பட்ட 'பி1617' எனப்படும் உருமாறிய கொரோனா கிருமியில் இருந்து சற்று மாறுபட்ட கிருமி அந்த நாடுகளில் இருப்பதாகக் கூறப்பட்டது.
இந்த வகை கொரோனா கிருமிகள் அதிகமாகப் பரவும் தன்மை கொண்டவை என்றும் மரணத்தை விளைவிக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தாக்கத்துக்கு புதிய வகை உருமாறிய கொரோனா கிருமி (பி.1.617) காரணமாக இருக்கும் என நிபுணர்கள் கருதுகிறார்கள்.
பல்வேறு நாடுகளில் இருந்து பெறப்பட்ட மாதிரிகளை ஆய்வு செய்ததன் மூலம் உருமாறிய கிருமிப் பரவல் குறித்து தெரியவந்துள்ளது.

