வேடிக்கை பார்க்க முடியாது என உச்ச நீதிமன்றம் காட்டம்

வேடிக்கை பார்க்க முடியாது என உச்ச நீதிமன்றம் காட்டம்

1 mins read
6bde6ac1-50a9-4f73-9f49-661d22265317
-

புது­டெல்லி: கிரு­மித்­தொற்­றுப் பாதிப்பு அதி­க­ரிப்­பால் பல பிரச்­சி­னை­கள், சிக்­கல்­கள் உரு­வா­கும்­போது அதை மௌ­ன­மாக வேடிக்கை பார்க்க முடி­யாது என உச்ச நீதி­மன்­றம் தெரி­வித்­துள்­ளது.

ஆக்­சி­ஜன், மருத்­து­வ­மனை படுக்­கை­கள், ரெம்­டெ­சி­விர் மருந்து ஆகி­ய­வற்­றுக்கு நாடு முழு­வ­தும் தட்­டுப்­பாடு ஏற்­பட்­டுள்­ள­தாக ஊட­கங்­களில் செய்­தி­கள் வெளி­யா­கின்­றன.

இதை­ய­டுத்து இந்த தட்­டுப்­பாடு குறித்து ஆறு உயர் நீதி­மன்­றங்­களில் வழக்­கு­கள் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன. இந்த விவ­கா­ரத்­தில் உச்ச நீதி­மன்­ற­மும் தாமாக முன்­வந்து வழக்­குப் பதிவு செய்­துள்­ளது.

இந்த வழக்­கின் வி்சாரணை நேற்று முன்­தி­னம் நடை­பெற்­றது. நீதி­ப­தி­கள் டி.ஒய். சந்­தி­ர­சூட், எல்.நாகேஸ்­வ­ர­ராவ், எஸ்.ரவீந்­திர பாட் ஆகி­யோ­ரைக் கொண்ட அமர்­வில் நடை­பெற்ற வாதங்­க­ளின் முடி­வில், மாநி­லங்­களில் உள்ள உயர் நீதி­மன்­றங்­கள் சிறந்த நிலை­யில் செயல்­படு­வ­தாக நீதி­ப­தி­கள் பாராட்டு தெரி­வித்­த­னர்.

"வழக்­கு­க­ளை­யும் தங்­கள் எல்­லைக்கு உட்­பட்டு கொரோனா சூழ­லை­யும் உயர் நீதி­மன்­றங்­கள் சிறப்­பா­கக் கண்­கா­ணிக்­கின்­றன. இதில் உச்ச நீதி­மன்­றத்­தின் பங்கு துணை­யாக இருப்­பது மட்­டும்­தான்.

"வட்­டார எல்­லை­களை மீறிச் சில செயல்­பா­டு­கள் இருப்­ப­தால் எங்­கள் தலை­யீட்­டைச் சரி­யான முறை­யில் புரிந்­து­கொள்ள வேண்­டும். உச்ச நீதி­மன்­றத்­தின் தலை­யீடு என்­பது சில தேசிய விவ­கா­ரங்­க­ளி­லும், மாநி­லங்­க­ளுக்கு இடை­யி­லான சிக்­கல் ஏற்­ப­டும்­போது மட்­டும்­தான் இருக்­கும்.

"எல்­லை­கள் தொடர்­பான விவ­கா­ரங்­க­ளைக் கையா­ளும்­போது உயர் நீதி­மன்­றங்­க­ளுக்கு ஏதே­னும் சிர­மங்­கள் இருந்­தால் நாங்­கள் உத­வு­வோம்," என்று உச்ச நீதி­மன்ற நீதி­ப­தி­கள் தெரி­வித்­த­தாக தினத்தந்தி' செய்தி வெளியிட்டுள்ளது.