கர்நாடகாவில் 3,000 கொரோனா நோயாளிகள் திடீர் மாயம்

கர்நாடகாவில் 3,000 கொரோனா நோயாளிகள் திடீர் மாயம்

2 mins read
a80144be-4bc5-441c-8058-9db744ff3a03
மகாராஷ்டிராவைச் சேர்ந்த 105 வயது தேனு உமாஜி என்ற முதியவரும் அவரது மனைவி மோதா பாயும் (95 வயது) கொரோனா கிருமித்தொற்றுப் பிடியிலிருந்து முழுமையாக மீண்டுள்ளனர். படம்: தகவல் ஊடகம் -

புது­டெல்லி: பல்­வேறு மாநி­லங்­களில் கொரோனா கிரு­மித்­தொற்று பாதிப்பு தொடர்ந்து அதி­க­ரித்து வரும் நிலை­யில் பெங்­க­ளூ­ரு­வில் கொரோனா நோயா­ளி­கள் 3,000 பேர் திடீ­ரென தலை­ம­றை­வாகிவிட்­ட­தாக அம்­மா­நில அரசு தெரி­வித்­துள்­ளது.

பெங்­க­ளூ­ரு­வில் செய்­தி­யா­ளர்­களி­டம் பேசிய மாநில வரு­வாய்த் துறை அமைச்­சர் ஆர். அசோக், தலை­ம­றை­வா­ன­வர்­க­ளைத் தேடிக் கண்­டு­பி­டிப்­பது பெரும் சவா­லாக உள்­ளது என்று குறிப்­பிட்டதாக 'தினத்தந்தி' செய்தி தெரிவிக்கிறது.

"தொற்று உறுதி செய்­யப்­பட்ட மூவா­யி­ரம் பேரில் பலர் தங்­க­ளின் கைபே­சியை அணைத்து வைத்­துள்­ள­னர். பரி­சோ­தனை முடி­வு­களை கைபேசி குறுந்­த­க­வல்­கள் மூலம் பெற்­ற­வர்­கள் சிகிச்சை பெற முன்­வ­ரு­வ­தில்லை.

"தற்­போது நில­வும் சூழ்­நி­லை­யில் காவல்­துறை மூலம் நூற்­றுக்­கணக்­கா­னோ­ரைத் தேடிக் கண்­டு­பி­டிப்­பது கடி­னம்," என்று அமைச்­சர் ஆர். அசோக் தெரி­வித்­தார்.

இவ்­வாறு தலை­ம­றை­வா­கி­ற­வர்­கள் தங்­கள் உடல்­நிலை மோச­மடை­யும்­போ­து­தான் மீண்­டும் தொடர்புகொள்­வ­தா­கக் குறிப்­பிட்ட அவர், இவ்­வாறு நடந்­து­கொண்­டால் சிகிச்சை அளிப்­பது கடி­ன­மா­கி­விடும் என்­றார்.

இதற்­கி­டையே, மகா­ராஷ்­டி­ரா­வில் நிலைமை மோச­ம­டைந்­துள்­ளது. அம்­மா­நி­லத்­தில் புதன்­கி­ழமை ஒரே நாளில் 985 பேர் கொரோனா பாதிப்­பால் பலி­யா­கி­விட்­ட­னர். இத­னால் மயா­னங்­கள் பிணக்­கு­வி­யல்­க­ளால் நிரம்பி வழி­வ­தாக ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.

புதன்­கி­ழமை ஒரே நாளில் புதி­தாக மேலும் 63 ஆயி­ரம் பேருக்கு கிருமி தொற்­றி­யுள்­ளது என்­றும் உயி­ரி­ழந்­தோர் மொத்த எண்­ணிக்கை 67,214 என்­றும் மாநில சுகா­தா­ரத்­துறை தெரி­வித்­துள்­ளது.

மும்­பை­யில் நேற்று முன்­தி­னம் மேலும் 4,926 பேர் நோய்த்­தொற்றால் பாதிக்­கப்­பட்­டனர். ஒரே நாளில் 78 பேர் பலி­யா­கி­விட்­ட­னர்.

இதற்­கி­டையே, கர்­நா­டக சட்­டப்­பே­ரவை சபா­நா­ய­கர் கார்­கே­ரிக்கு கிரு­மித்­தொற்று இருப்­பது உறு­தி­யா­னது. ராஜஸ்­தான் முதல்­வர் அசோக் கெலாட்­டும் 'கொவிட்-19' நோயால் பாதிக்­கப்­பட்­டுள்­ளார்.

இந்­நி­லை­யில், கேர­ளா­வில் முழு ஊர­டங்கை அமல்­ப­டுத்த வேண்டிய அவ­சி­ய­மில்லை என அம்­மாநில அரசு தெரி­வித்­துள்­ளது.

நேற்று முன்­தி­னம் முதல்­வர் பின­ராயி விஜ­யன் தலை­மை­யில் நடை­பெற்ற அமைச்­ச­ர­வைக் கூட்­டத்­தில் இம்­மு­டிவு எடுக்­கப்­பட்­ட­தாக ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

கேர­ளா­வில் வார இறுதி நாட்­களில் ஊர­டங்கு அமல்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. மேலும் திரை­ய­ரங்­கு­கள், மதுக்­க­டை­கள், சுற்­றுலா மையங்­கள் மூடப்­பட்­டுள்­ளன. அவ­ச­ரத் தேவையை முன்­னிட்டு 10 மில்­லி­யன் தடுப்­பூ­சி­கள் வாங்க அம்­மா­நில அரசு முடிவு செய்­துள்­ளது. அங்கு அண்­மைய சட்­டப்­பே­ர­வைத் தேர்­த­லில் போட்­டி­யிட்ட காங்­கி­ரஸ் வேட்­பா­ளர் பிரகாஷ் கொரோனா பாதிப்­பால் உயி­ரி­ழந்­தார்.