தடுப்பூசி விலையைக் குறைத்தது சீரம் நிறுவனம்

தடுப்பூசி விலையைக் குறைத்தது சீரம் நிறுவனம்

1 mins read
c0dd8aaa-cd7c-465c-a294-5f614fba7e49
-

புனே: கொரோனா தடுப்­பூ­சி­யின் விலை­யைக் குறைக்க வேண்­டும் என்று பல்­வேறு தரப்­பி­ன­ரும் கோரிக்கை விடுத்ததையடுத்து இந்­திய சீரம் நிறு­வ­னம் தனது தடுப்­பூ­சி­யின் விலை­யைக் குறைத்­துள்­ளது என 'தி ஹிந்து' நாளேடு தெரிவித்துள்ளது.

இந்­திய சீரம் நிறு­வ­னம் மில்­லி­யன் கணக்­கில் தடுப்­பூ­சி­க­ளைத் தயா­ரித்து வரு­கிறது. மத்­திய அர­சின் தடுப்­பூசித் திட்­டத்­துக்கு, ஓர் ஊசி 150 ரூபாய் என்ற விலை­யில் வழங்கி வரும் சீரம் நிறு­வ­னம் தனி­யார் மருத்­து­வ­ம­னை­க­ளுக்கு 250 ரூபாய் என்ற விலை­யில் தடுப்­பூ­சி­களை விற்­கிறது.

இந்­நி­லை­யில் கடந்த 21ஆம் தேதி தடுப்­பூ­சி­யின் விலையை திடீ­ரென அதி­க­ரித்­தது சீரம் நிறு­வ­னம். மாநி­லங்­க­ளுக்கு ஒரு தடுப்­பூசி 400 ரூபாய் என்ற விலை­யில் விற்­கப்­படும் என்­றும் தனி­யார் மருத்­து­வ­மனை­கள் ஒரு தடுப்­பூ­சிக்கு 600 ரூபாய் வழங்­க­வேண்டி இருக்­கும் என்­றும் சீரம் நிறு­வ­னம் அறி­வித்­தது.

இந்த விலை உயர்­வுக்கு கடும் கண்­ட­னங்­கள் எழுந்­தன. தடுப்பூசி­களுக்­காக மக்­கள் அதி­க­ளவு பணத்­தைச் செல­விட வேண்­டிய கட்­டா­யத்­துக்கு மத்­திய அரசு மக்­களை ஆட்­ப­டுத்தி உள்­ள­தாக காங்­கி­ரஸ் கட்சியின் முன்­னாள் தலை­வர் ராகுல் காந்தி குற்­றம்சாட்­டி­ இருந்­தார்.

இந்­நி­லை­யில், மக்­கள் நல­னைக் கருத்­தில் கொண்டு மாநி­லங்­க­ளுக்­கான தடுப்­பூ­சி­க­ளின் விலையை 300 ரூபாயாகக் குறைத்­துள்­ள­தாக சீரம் நிறு­வ­னம் அறி­வித்­துள்­ளது.

இந்த விலைக் குறைப்பு உட­ன­டி­யாக அம­லுக்கு வரு­வ­தா­க­வும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.