மயானங்களில் அணையா நெருப்பு: குவியும் சடலங்கள்

மயானங்களில் அணையா நெருப்பு: குவியும் சடலங்கள்

1 mins read
44fdd637-d5c4-4d46-b952-f26ab4034a31
டெல்லியில் தற்காலிக மயானமாக மாற்றப்பட்ட திடலில் சடலங்கள் மொத்தமாக எரியூட்டப்படுகின்றன. படம்: இபிஏ -

மும்பை: மும்பை, பெங்­க­ளூரு, டெல்லி உட்­பட பல நக­ரங்­களில் மயா­னங்­களில் எரி­யூட்­டப்­பட ஏரா­ள­மான சட­லங்­கள் காத்­துக்­கி­டப்­ப­தாக ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

மும்­பை­யில் உள்ள மயா­னத்­தில் பணி­யாற்­றும் சயத் முனிர் கம்­ரு­தீன் தின­மும் 24 மணி­நே­ர­மும் சட­லங்­கள் வந்­த­வண்­ணம் இருப்­ப­தா­கச் சொல்­கி­றார்.

கொரோனா தொற்று குறித்து தாம் அச்­சப்­ப­ட­வில்லை என்று அவர் கூறி­ய­தாக 'ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ்' தெரி­வித்­துள்­ளது.

இதற்­கி­டையே பெங்­க­ளூ­ரு­வில் உள்ள 13 மின் மயா­னங்­களி­லும் தின­மும் 24 மணி நேர­மும் உடல்­கள் தக­னம் செய்­யப்­பட்டு வரு­கின்­றன. மயா­னத்­தின் முன்பு வாக­னங்­கள் நீண்ட வரி­சை­யில் நிற்­கின்­றன.

'கொவிட்-19'க்குப் பலி­யா­ன­வர்­களின் உடல்­க­ளைத் தக­னம் செய்ய உற­வி­னர்­கள் இரண்டு நாள்­கள் வரை காத்­தி­ருக்க வேண்டியிருப்­ப­தாக 'தினத்­தந்தி' இணை­யத்­த­ளச் செய்தி தெரி­விக்­கிறது.

பெங்­க­ளூரு சாம்­ராஜ் பேட்­டை­யில் உள்ள மின்­ம­யா­னத்­தில் உடல்­கள் தொடர்ந்து எரி­யூட்­டப்­படு­வ­தால் மயா­னத்­துக்கு அருகே உள்ள குடி­யி­ருப்­பு­களில் வசிப்­ப­வர்­கள் பிண­வாடை அடிப்­ப­தால் வீடு­களில் இருக்க முடி­ய­வில்லை என்று வேதனை தெரி­வித்­துள்­ள­னர்.

தலை­ந­கர் டெல்­லி­யி­லும் மயா­னங்­களில் சட­லங்­கள் வரி­சை­யாக கிடத்­தப்­பட்டு பல மணி­நே­ரங்­க­ளுக்­குப் பிறகு எரி­யூட்­டப்­ப­டு­வதாக தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.