தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வீடுகளுக்கு குறியீடு வைத்து கொள்ளை: மூவர் கைது

1 mins read
2a60255d-92f7-4810-af0e-be3aef35628e
-

பெங்­க­ளூரு: வீடு­க­ளுக்கு அடை­யா­ளக் குறி­யீடு வைத்து கொள்­ளை­ய­டித்த மூன்று பேர் கொண்ட கும்­பலை கர்­நா­டக காவல்­து­றை­யி­னர் கைது செய்­துள்­ளதாக 'தினமலர்' நாளேடு தெரிவித்துள்ளது.

வாச­லில் கோலம் இல்­லாத வீடு­கள், வீட்­டின் முன் நாளி­தழ் கிடப்­பது, குப்பை பெருக்­காத வீடு­கள் என்று பல்­வேறு அடை­யா­ளக் குறி­யீ­டு­க­ளைக் கொள்­ளை­யர்­கள் பயன்­ப­டுத்­தி­யது விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­துள்­ளது.

பெங்­க­ளூ­ரைச் சேர்ந்த 24 வய­தான சப்­பாத்தி, 22 வய­தான யஷ்­வந்த், 29 வய­தான மோகன்­கு­மார் ஆகிய மூவ­ரும் கூட்­டணி அமைத்து திருடி வந்­துள்­ள­னர். பகல் முழு­வ­தும் இரு­சக்­கர வாக­னத்­தில் சுற்­றித் திரியும் இவர்கள் புற­ந­கர்ப் பகு­தி­களில் உள்ள வீடு­களை நோட்­ட­மி­டு­வது வழக்­கம். அச்­ச­ம­யம் எந்த வீடு­களில் இரவு நேரத்­தில் புகுந்து கொள்­ளை­ய­டிக்­க­லாம் என்­பதை முடிவு செய்­து, அதற்கு சில குறி­யீ­டு­க­ளைப் பயன்­ப­டுத்தி உள்­ள­னர்.

குப்பை பெருக்­காத வீடு­கள், கோலம் போடப்­ப­டாத வீடு­களை ஒன்­றி­ரண்டு நாட்­கள் நோட்­ட­மிட்ட பின்­னர் அந்த வீடு­களில் புகுந்து கொள்­ளை­ய­டிப்­பது முடி­வா­கும். இரவு நேரத்­தில் வீடு மாறிச் சென்று­வி­டக்­கூ­டாது என்­ப­தற்­கா­கவே மூவ­ரும் இந்­தக் குறி­யீ­டு­க­ளைப் பயன்­ப­டுத்­தி­ய­தா­கத் தெரி­கிறது.

அண்­மைய சில வாரங்­க­ளாக பெங்­க­ளூ­ரின் பல்­வேறு பகு­தி­களில் மூவ­ரும் தங்­கள் கைவ­ரி­சை­யைக் காட்­டி­யுள்­ள­னர். இந்­நி­லை­யில் பெங்­க­ளூரு போலி­சா­ரி­டம் நேற்று முன்­தி­னம் மூவ­ரும் சிக்­கி­னர்.

அவர்­க­ளி­டம் இருந்து 44.5 லட்­சம் ரூபாய் மதிப்­புள்ள தங்க நகை­கள் பறி­மு­தல் செய்­யப்­பட்­டன. கொள்ளையடித்த பணத்­தில் கோவா சென்று உல்­லா­ச­மாக இருந்­த­தாக மூவ­ரும் தெரி­வித்­துள்­ள­னர்.