ஹைதராபாத்: கொவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தெலுங்கானா மாநிலத்தில் நேற்று முதல் மே 21ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி முதல் தெலுங்கானாவில் இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு நாட்களில் தினமும் காலையில் 6 மணி முதல் 10 மணி வரை மக்களின் அனைத்துச் செயல்பாடுகளுக்கும் அனுமதி அளிக்கப்படும்.
மற்றபடி, ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் கட்டுப்பாட்டுத் தளர்வு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் நகர்ப்புறங்களில் தங்கி வேலை செய்துவரும் வெளியூர்க்காரர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக பேருந்து நிலையங்களிலும் ரயில் நிலையங்களில் ஊரடங்கு விதிக்கப்பட்ட முதல் நாளில் குவிந்தனர்.
அவர்களில் பலர் கைக்குழந்தைகளுடனும் தங்கள் பயணப் பெட்டிகளுடனும் ரயில் நிலையங்களில் நெடுநேரம் காத்திருந்து அவதிக்கு ஆளாகினர்.
தடுப்பூசிகளை வெளிநாடுகளில் இருந்து கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரவும் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டதாகவும் முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

