பெங்களூர்: கர்நாடகாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 40 ஆயிரத்துக்கும் மேல் பதிவாகி வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் படுக்கைகள் தட்டுப்பாடு, ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளிட்டவை ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில் முதல்வர் எடியூரப்பா பெங்களூருவில் நேற்று ஆக்சிஜன் பேருந்து சேவையை அறிமுகப்படுத்தினார்.
பின்னர் எடியூரப்பா கூறும்போது, "கொரோனாதொற்றின் பாதிப்பால் ஆக்சிஜன்தேவை அதிகரித்துள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் கர்நாடகாவில் கொரோனா மரணங்கள் அதிகம். எனவே இனி அத்தகைய சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில் ஆக்சிஜன் பேருந்துச் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது," என்றார்.