புதுடெல்லி: கொரோனா விவகாரத்தை முறையாக கையாளத் தவறியதால், மக்களிடம் பிரதமர் மோடியின் செல்வாக்கு சரிந்துள்ளதாக அமெரிக்க நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. தொற்று 2வது அலையில் உலகிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா உள்ளது. மருத்துவமனையில் இடமில்லை, ஆக்சிஜன், வென்டிலேட்டர் பற்றாக்குறையால் பலர் தங்கள் அன்புக்குரியவர்களின் இறப்பை கண்கூடாக பார்க்கின்றனர். நிலைமை மோசமானதற்கு, முன்கூட்டியே நிபுணர்கள் விடுத்த எச்சரிக்கையை பாஜக அரசு செவிமடுக்காததுதான். இதனால்தான் சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக பெரும் ஏமாற்றத்தை சந்தித்துள்ளது.
இந்தநிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த 'மார்னிங் கன்சல்ட்' என்ற நிறுவனம் 'குளோபல் லீடர்ஸ்' பட்டியலில் உள்ள பிரதமர் மோடியின் செல்வாக்கு குறித்த கணிப்பை வெளியிட்டுள்ளது.

