செய்திக்கொத்து

செய்திக்கொத்து

1 mins read
12ab64f7-560a-4d12-a517-0e0987b2a927
-

தொற்றைக் கட்டுப்படுத்த உ.பி. திணறல்

லக்னோ: உத்­த­ரப்­பி­ர­தேச அரசு நகர்­ப்பு­றங்­களில் கொரோனா தொற்­றைக் கட்­டுப்­ப­டுத்த மிகுந்த சிர­மப்­ப­டு­கிறது, கிரா­மப்­பு­றங்­களில் உள்ள பாதிக்­கப்­பட்ட மக்­க­ளைக் கண்­ட­றிந்து அவர்­க­ளுக்கு சிகிச்சை அளிப்­ப­தும், பாதிக்­கப்­பட்­ட­வர்­களைக் கண்­டு­பி­டிப்­ப­தும், பரி­சோ­த­னை­களை நடத்­து­வ­தும் கடி­ன­மாக உள்­ளது என்று அம்­மா­நி­லத்­தின் உயர் நீதி­மன்ற நீதிபதி சித்­தார்த் சாடி­யுள்­ளார். "கொரோனா முதல் அலை­யின்­போது உத்­த­ரப்­பி­ர­தே­சத்­தின் கிரா­மங்­க­ளுக்குத் தொற்று அதி­க­மா­கப் பர­வ­வில்லை. ஆனால், 2வது அலை­யில் அதி­க­மா­கப் பர­வி­விட்­டது. தொற்று பர­வ­லைக் கட்டுப்படுத்த போது­மான அளவு அரசு தன்னை தயார்­ப­டுத்­த­வில்லை, முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்கை ஏதும் எடுக்­க­வில்லை. "தொற்றுப் பர­வல் காலத்­தில் உ.பி. உள்ளிட்ட சில மாநி­லங்­க­ளில் தேர்­தல் நடத்­தப்பட்டன. அதனால் ஏற்­ப­டும் பாதிப்புகளைக் கணிக்­கத் தேர்­தல் ஆணை­ய­மும் அர­சாங்­கங்­களும் தவ­றி­விட்­டன," என்று அவர் கூறி­னார்.

ராணுவத்தில் தொற்று அதிகரிப்பு

புதுடெல்லி: இந்திய ராணுவ வீரர்கள் கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாவது அதிகரித்துள்ளது. மே 10ஆம் தேதி நிலவரப்படி 5,134 ராணுவ வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 5,000 ராணுவ வீரர்கள் இப்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த மூன்று வாரத்தில் ராணுவ மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை ஐந்து மடங்காக அதிகரித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 1,067 ராணுவ வீரர்களுக்கு மட்டுமே தொற்று பாதிப்பு ஏற்பட்டிருந்தது.

கொரோனா தொற்றின் முதல் அலையில் 133 இராணுவ வீர்ர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.