லக்னோ: கங்கை ஆற்றின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான உடல்கள் புதைக்கப்பட்டிருப்பதாக 'மாலைமலர்' நாளேட்டுச் செய்தி தெரிவிக்கிறது.
இவ்வாறு புதைக்கப்பட்ட பிணங்கள் ஆற்றில் மிதக்கத் தொடங்கியதால் மக்கள் மத்தியில் பீதி நிலவுகிறது.
பீகார், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் கங்கை ஆற்றில் சடலங்கள் மிதப்பதைக் கண்டு பொதுமக்கள் புகார் எழுப்பி வருகின்றனர்.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் உன்னாவ் மாவட்டத்தின் இரண்டு இடங்களில் கங்கை ஆற்றின் கரையோரம் மணலில் ஏராளமான உடல்கள் புதைக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்கள் இவ்வாறு ஆற்றுப்பகுதியில் புதைக்கப்பட்டனவா என்பது உறுதியாகவில்லை.
மிதந்து வரும் உடல்களைக் கைப்பற்றி அவற்றை மறு அடக்கம் செய்ய பீகார் அரசு ஏற்பாடு செய்துள்ளது.

