மகாராஷ்டிரா: 2 ஆயிரம் பேருக்கு கறுப்புப் பூஞ்சை நோய் பாதிப்பு

மகாராஷ்டிரா: 2 ஆயிரம் பேருக்கு கறுப்புப் பூஞ்சை நோய் பாதிப்பு

2 mins read
4290f3fb-9c87-465d-942b-fc4a0be98f15
-

மும்பை: மகா­ராஷ்­டி­ரா­வில் கொரோனா நோயா­ளி­களை கறுப்புப் பூஞ்சை நோய் அதிக அள­வில் தாக்கு­வது தெரி­ய­வந்­துள்­ளது. அங்கு சுமார் 2 ஆயி­ரம் பேருக்கு இந்­தப் பாதிப்பு ஏற்­பட்­டுள்­ளது.

தற்­போது 111 பேர் மும்பை மருத்து­வ­ம­னை­களில் சிகிச்சை பெற்று வரு­வ­தாக 'தினத்­தந்தி' செய்தி வெளியிட்டுள்ளது.

அதி­கப்­ப­டி­யான ஸ்டீ­ராய்டு மருந்து­களை உட்­கொள்­வ­தால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து கறுப்­புப் பூஞ்சை நோய் ஏற்­ப­டு­வ­தாக மருத்­து­வர்­கள் தெரி­வித்­துள்­ள­னர். இத­னால் உயி­ரி­ழக்­கும் வாய்ப்­புண்டு என்று நிபு­ணர்­கள் கூறு­வ­தாக அந்­தச் செயதி மேலும் தெரி­விக்­கிறது.

நீரி­ழிவு நோய் உள்­ள­வர்­க­ளுக்கு இந்­தப் பாதிப்பு எளி­தில் ஏற்­படும் என்­றும் கண்­க­ளுக்­குக் கீழ் வலி, பார்­வைக் குறை­பாடு, காய்ச்­சல் ஆகி­யவை இந்­தப் பூஞ்சை பாதிப்­புக்­கான முக்­கிய அறி­கு­றி­கள் என­வும் தெரி­ய­வந்­துள்­ளது.

தொற்­றுப் பர­வல் அதி­க­ரித்து வரு­வ­தால் பூஞ்சை பாதிப்­பும் தொடர்ந்­து அதி­க­ரிக்க வாய்ப்­புள்­ள­தாக மகா­ராஷ்­டிர சுகா­தார அமைச்­சர் ராஜேஷ் தோபே தெரி­வித்­துள்­ளார்.

மகா­ராஷ்­டி­ரா­வில் ஊர­டங்கு கட்­டுப்­பா­டு­கள் மேலும் 15 நாள்­க­ளுக்கு நீட்­டிக்­கப்­ப­டு­கிறது. நேற்று முன்­தினம் நடை­பெற்ற அமைச்­ச­ர­வைக் கூட்­டத்­தில் இம்­மு­டி­வெ­டுக்­கப்­பட்­ட­தாக ஊட­கங்­கள் தெரி­விக்­கின்­றன.

இந்­நி­லை­யில், மகா­ராஷ்­டி­ரா­வில் நேற்று முன்­தி­னம் ஒரே நாளில் 41 ஆயி­ரம் பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். எனி­னும் கடந்த சில வாரங்­க­ளாக அங்கு பதி­வான புது தொற்­றுச் சம்­ப­வங்­க­ளின் சரா­ச­ரி­யை­விட இது குறை­வா­னது என அம்­மா­நில சுகா­தா­ரத் துறை தெரி­வித்­துள்­ளது.

இதே­போல் கர்­நா­ட­கா­வி­லும் கேர­ளா­வி­லும் 40 ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்ட புதிய தொற்­றுச் சம்­ப­வங்­கள் பதி­வா­கி­யுள்­ளன. மரண எண்­ணிக்­கை­யில் மகா­ராஷ்­டிரா முத­லி­டத்­தில் உள்­ளது.