24 மில்லியன் பேர் பாதிப்பு: பிரதமர் மோடி எச்சரிக்கை

24 மில்லியன் பேர் பாதிப்பு: பிரதமர் மோடி எச்சரிக்கை

2 mins read
789802fa-b0fe-430e-bcbc-9605a520abd1
அமிர்தசரசில் பொது முடக்கம் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக காவல்துறையினர் நேற்று ஒரு சந்தைப் பகுதியில் அணிவகுப்பு நடத்தினர்.படம்: ஏஎஃப்பி -

முதன்முறையாக கிராமப்புறங்களிலும் கொரோனா பரவுவதாக இந்திய பிரதமர் கவலை

புது­டெல்லி: இந்­தி­யா­வில் கொரோனா கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோ­ரின் மொத்த எண்­ணிக்கை 24 மில்­லி­ய­னைக் கடந்­துள்­ளது. தொடர்ந்து மூன்­றா­வது நாளாக மர­ண­ம­டைந்­தோர் எண்­ணிக்கை நான்கு ஆயி­ர­மா­கப் பதி­வாகி உள்­ளது.

இந்­நி­லை­யில், கிரு­மித்­தொற்று கிரா­மப்­பு­றங்­க­ளுக்­கும் அதி­வே­க­மா­கப் பரவி வரு­வ­தாக பிர­த­மர் மோடி கவலை தெரி­வித்­துள்­ளார். நேற்று காணொளி வசதி மூலம் விவ­சா­யி­க­ளு­டன் கலந்­து­ரை­யா­டிய போது அவர் தன் கவ­லையை வெளிப்­ப­டுத்­தி­னார்.

அனைத்து விவ­சா­யி­க­ளுக்­கும் கிரா­மங்­களில் வசிப்­ப­வர்­க­ளுக்­கும் கொரோனா கிருமி குறித்து மீண்­டும் எச்­ச­ரிக்க விரும்­பு­வ­தாக குறிப்­பிட்ட அவர், இந்த போராட்­டத்தை எதிர்­கொள்­ளத் தேவைப்­படும் அனைத்து நட­வ­டிக்­கை­களும் எடுக்­கப்­பட்டு வரு­வ­தாக தெரி­வித்­தார்.

கொரோனா கிரு­மித்­தொற்று கிரா­மப்­பு­றங்­க­ளுக்கு பர­வு­வது குறித்து முதன்­மு­றை­யாக பேசி­யுள்­ளார் பிர­த­மர் மோடி.

இதற்­கி­டையே கடந்த 24 மணி­நே­ரத்­தில் இந்­தி­யா­வில் 343,144 பேருக்கு புதி­தாக கிருமி தொற்­றி­யுள்­ளது. 4,000 பேர் உயி­ரி­ழந்­து­விட்­ட­னர்.

எனி­னும் கடந்த வாரம் புதிய உச்­ச­மாக 414,188 பேர் பாதிக்­கப்­பட்ட நிலை­யில், இப்­போது தொற்று எண்­ணிக்கை குறைந்­துள்­ளது.

கொரோ­னா­வால் நாட்­டில் 24 மில்­லி­யன் பேர் பாதிக்­கப்­பட்ட நிலை­யில், 262,317 பேர் மாண்­டு­விட்­ட­னர்.

இந்­நி­லை­யில் பல கிரா­மப்­பு­றங்­களில் கொரோனா பரி­சோ­தனை நடத்­தப்­ப­டா­த­தால் பாதிக்­கப்­ப­டு­வோ­ரின் எண்­ணிக்கை அதி­க­மாக இருக்­கக்­கூ­டும் என நிபு­ணர்­கள் கரு­து­வ­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

சிற்­றூர்­க­ளி­லும் ஊர­கப் பகு­தி­க­ளி­லும் உள்ள மருத்­து­வ­ம­னை­களில் சிகிச்சை அளித்­தும் பல­னில்­லா­மல் உயி­ரி­ழந்த குடும்ப உறுப்­பி­ன­ருக்­காக பலர் கண்­ணீர் விடும் காட்­சி­களை தொலைக்காட்சிகள் ஒளிபரப்புவதாக ஊடகச்­செய்தி தெரி­விக்­கிறது.

"போர்க்­கால அடிப்­ப­டை­யில் பணி­கள் நடை­பெற்று வரு­கின்­றன. அர­சாங்­கத்­தின் அனைத்து துறை­கள், ஆயு­தப்­ப­டை­கள், நமது விஞ்­ஞா­னி­கள் என அனை­வ­ரும் இரவு பகல் பாரா­மல் தொற்று நோய்க்கு எதி­ராக பணி­யாற்றி வரு­கின்­ற­னர்," என்று பிர­த­மர் மோடி தெரி­வித்­துள்­ளார்.

இதற்­கி­டையே இந்­திய உரு­மா­றிய கொரோனா எனக் குறிப்­பி­டப்­படும் 'பி1617' மிக வேக­மாக பர­வக்­கூ­டி­யது என்­கி­றார் உலக சுகா­தார அமைப்­பைச் சேர்ந்த மருத்­து­வர் ஜெய்ரோ மென்­டெஸ்.

உரு­மா­றிய கொரோ­னா­வால் பாதிக்­கப்­பட்­டோ­ரின் எண்­ணிக்கை இங்­கி­லாந்­தில் 1,313ஆக அதி­க­ரித்­துள்­ளது என்­றும் இது கடந்த வாரத்­தை­விட இரு மடங்கு அதி­கம் என்­றும் அந்­நாட்டு அரசு தெரி­வித்­துள்­ளது.

கொரோனா கிரு­மித்­தொற்று பர­வல் தடுப்பு நட­வ­டிக்­கை­கள் தொடர்­பாக 100 மாவட்ட ஆட்­சி­யர்­க­ளு­டன் பிர­த­மர் மோடி ஆலோ­சனை நடத்த உள்­ளார்.

எதிர்­வ­ரும் 18, 20ஆம் தேதி­களில் இந்த ஆலோ­சனை நடக்க உள்­ள­தாக 'தினத்­தந்தி' நாளேட்­டின் இணையதளச் செய்தி தெரி­விக்­கிறது.