பரிசீலனையில் மேலும் 5 புதிய தடுப்பூசிகள்

பரிசீலனையில் மேலும் 5 புதிய தடுப்பூசிகள்

1 mins read
82bb52cf-e327-4698-8afd-b3a4dc36179d
-

புது­டெல்லி: தற்­போது தயா­ரிப்­பில் உள்ள மூன்று தடுப்­பூ­சி­க­ளு­டன் மேலும் ஐந்து கொரோனா தடுப்­பூ­சி­களை பயன்­ப­டுத்த மத்­திய அரசு திட்­ட­மிட்­டுள்­ள­தாக நிதி ஆயோக் உறுப்­பி­ன­ரான வி.கே.பால் தெரி­வித்­துள்­ளார்.

இவற்­றுள் நான்கு தடுப்­பூ­சி­களை இந்­தி­யா­வில் தயா­ரிக்க இருப்­ப­தாக அவர் தெரி­வித்­தார் என்று இந்­துஸ்­தான் டைம்ஸ் இணை­ய­த­ளச் செய்தி தெரி­விக்­கிறது.

தற்­போது கோவி­ஷீல்டு, கோவேக்­சின், ஸ்புட்­னிக்-வி ஆகிய தடுப்­பூ­சி­களை இந்­தியா பயன்­ப­டுத்தி வரு­கிறது.

இந்­நி­லை­யில் பல்­வேறு மாநி­லங்­களில் தடுப்­பூ­சிக்கு தட்­டுப்­பாடு நில­வு­வ­தால் அதன் உற்­பத்­தியை அதி­க­ரிக்க மத்­திய அரசு நட­வ­டிக்கை மேற்­கொண்­டுள்­ளது.

இந்த ஆண்டு இறு­திக்­குள் இரண்டு பில்­லி­யன் தடுப்­பூ­சி­களை உற்­பத்தி செய்ய இலக்கு நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது.

இதை­ய­டுத்து மேலும் புதி­தாக ஐந்து தடுப்­பூ­சி­க­ளைப் பயன்­ப­டுத்­து­வது குறித்து மத்­திய அரசு பரி­சீ­லித்து வரு­வ­தாக வி.கே.பால் மேலும் தெரி­வித்­துள்­ளார்.

இதன் மூலம் நிர்ணயித்த இலக்கை எட்டிப்பிடிக்க முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.