புதுடெல்லி: கொரோனா காலகட்டத்தின் போதும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தாயகத்திற்கு 6.22 லட்சம் கோடி ரூபாய் அனுப்பியுள்ளனர்.
உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில் இத்தகவல் இடம்பெற்றுள்ளது.
அண்மையில் அந்த வங்கி வெளியிட்ட அறிக்கையில், கடந்த 2020ஆம் ஆண்டு வெளிநாடு வாழ் இந்தியர்கள் 6.22 லட்சம் கோடி ரூபாயை இந்தியாவுக்கு அனுப்பி உள்ளனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தொகையானது 2019ல் அனுப்பிய 6.24 லட்சம் கோடி ரூபாயை விட 0.2 விழுக்காடு மட்டுமே குறைவாகும்.
ஐக்கிய அமீரக சிற்றரசில் பணிபுரியும் இந்தியர்கள் கடந்தாண்டு அனுப்பிய தொகையில் முந்தைய ஆண்டை விட 17 விழுக்காடு சரிவு ஏற்பட்டுள்ளது.
அதேசமயம் அமெரிக்காவில் இருந்து அனுப்பப்படும் தொகை அதிகரித்துள்ளது.

