செறிவூட்டிகள் மோசடி: தொழிலதிபர் தலைமறைவு

செறிவூட்டிகள் மோசடி: தொழிலதிபர் தலைமறைவு

1 mins read
ebec6265-387d-41c9-a4ec-168706aee41a
-

புது­டெல்லி: உயிர்­வாயு செறி­வூட்­டி­களை அதிக விலைக்கு விற்ற பிர­பல தொழில் அதி­பர் நவ்­நீத் கல்ரா திடீ­ரென தலை­ம­றை­வாகி உள்­ளார்.

டெல்லி அர­சி­யல் பிர­மு­கர்­கள் பல­ரு­டன் நெருக்­க­மாக இருப்­ப­வர் நவ்­நீத் கல்ரா. கடந்த சட்­டப்­பே­ர­வைத் தேர்­த­லில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று டெல்­லி­யில் ஆட்சி அமைத்­தது. அர­விந்த் கெஜ்­ரி­வால் முதல்­வ­ரா­கப் பதவி ஏற்­ற­போது அந்­நி­கழ்­வில் நவ்­நீத் சிறப்பு அழைப்­பா­ள­ராக பங்­கேற்­றார்.

மேலும் 'டெல்­லி­யைப் புன­ர­மைத்­த­வர்' என்ற விரு­தை­யும் அளித்து கௌர­வப்­ப­டுத்­தி­யது டெல்லி அரசு.

இந்­நி­லை­யில் சீனா­வி­லி­ருந்து உயிர்­வாயு செறி­வூட்­டி­களை இறக்­கு­மதி செய்து அவற்றை நான்கு மடங்கு அதிக விலைக்கு விற்க முயன்­ற­தாக நவ்­நீத் கல்ரா மீது குற்­றம்­சாட்­டப்­பட்­டுள்­ளது.

அவ­ருக்­குச் சொந்­த­மான உண­வ­கத்­தி­லி­ருந்து 524 கரு­வி­கள் பறி­மு­தல் செய்­யப்­பட்­டன. 20 ஆயி­ரம் ரூபாய்க்கு வாங்­கப்­பட்ட இயந்­தி­ரங்­களை ரூ.80 ஆயி­ரத்­துக்கு விற்­றார் என்­பது நவ்­நீத் மீது டெல்லி காவல்­துறை முன் வைத்­துள்ள குற்­றச்­சாட்­டா­கும்.