புதுடெல்லி: கடந்த ஏழு ஆண்டுகளில் முதன்முறையாக தன்னைப் பற்றிய விமர்சனத்தை எதிர்கொண்டுள்ளார் பிரதமர் மோடி.
கொரோனா விவகாரத்தை எதிர்கொள்வதில் அவரது அரசு தோல்வி கண்டுவிட்டதாக விமர்சிக்கப்படுகிறது.
அவுட்லுக் மே மாத இதழின் அட்டையில் 'காணவில்லை' (மிஸ்ஸிங்) என்ற வார்த்தை சிவப்பு வண்ணத்தில் இடம்பெற்றுள்ளது. மோடி தலைமையிலான அரசைக் குறிக்கும் வகையில் இந்த வார்த்தை இடம்பெற்றதாக கருதப்படுகிறது.
இந்தியா டுடே இதழின் அட்டையில் 'தோல்வியுற்ற அரசு' (தி ஃபெய்ல்ட் ஸ்டேட்) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாமல், மருத்துவ நிபுணர்கள், நீதிமன்றங்களிடம் இருந்து கடும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளார் பிரதமர் மோடி.
இந்தி நடிகர் அனுபம் கெர் போன்ற, ஒரு காலத்தில் மோடியின் தீவிர ஆதரவாளர்களாக இருந்தவர்களும்கூட அவரை விமர்சிக்கத் தயாராகிவிட்டனர்.
மருத்துவ நிபுணர்கள் கூறுவதை மோடி அரசாங்கம் காது கொடுத்துக் கேட்பதாக இல்லை என்கிறார் இந்திய மருத்துவச் சங்கத்தின் தலைவர் ஜெயலால்.
லேன்சட் மருத்துவ இதழும் விமர்சித்துள்ளது. மொத்தத்தில் அவரது செல்வாக்கு குறைந்துள்ளதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

