கேரளா: நான்கு மாவட்டங்களில் முத்தடுப்பு ஊரடங்கு அமல்

கேரளா: நான்கு மாவட்டங்களில் முத்தடுப்பு ஊரடங்கு அமல்

2 mins read
b041a04a-86d2-4c44-83dc-6208fe4fd59b
ஊரடங்கால் கொச்சி நகரில் வெறிச்சோடிய சாலை. படம்: ஊடகம் -

தொற்றுப்பரவல் குறையவில்லை: மே 23ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

திருவனந்தபுரம்: கேர­ளா­வில் ஊர­டங்கு அமல்­ப­டுத்­தப்­பட்ட போதி­லும் கொரோனா கிரு­மித்தொற்­றுப் பர­வல் இன்­னும் கட்­டுக்­குள் வர­வில்லை. இதை­ய­டுத்து அங்கு மே 23ஆம் தேதி­வரை ஊர­டங்கு நீட்­டிக்­கப்­பட்­டுள்­ளது.

மேலும் அங்­குள்ள நான்கு மாவட்­டங்­களில் 'முத்­த­டுப்பு' ஊர­டங்கு அமல்­ப­டுத்­தப்­படும் என முதல்­வர் பின­ராயி விஜ­யன் தெரி­வித்­துள்­ளார்.

கேர­ளா­வில் அன்­றா­டம் பதி­வா­கும் தொற்­றுச் சம்­ப­வங்­க­ளின் எண்­ணிக்கை தொடர்ந்து அதி­க­ரித்து வந்­ததை அடுத்து மே 8ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை ஊர­டங்கு உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டது. கடும் கட்­டுப்­பா­டு­களும் விதிக்­கப்­பட்­டன.

எனி­னும் தொற்று எண்­ணிக்கை இன்­னும் குறை­ய­வில்லை.

இந்­நி­லை­யில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய கேரள முதல்­வர் பின­ராயி விஜ­யன், மாநி­லத்­தில் ஊர­டங்கு உத்­த­ரவு மே 23ஆம் தேதி வரை நீட்­டிக்­கப்­படும் எனத் தெரி­வித்­தார்.

பல்­வேறு மாவட்­டங்­களில் கொரோனா பாதிப்பு எதிர்­பார்த்த அளவு குறை­ய­வில்லை என்று குறிப்­பிட்ட அவர், ஒன்­பது நாட்­க­ளுக்கு அறி­விக்­கப்­பட்ட ஊர­டங்­கால் கொரோனா பர­வல் ஓர­ளவு மட்­டுமே கட்­டுப்­பட்­டி­ருப்­ப­தாக சுட்­டிக்­காட்­டி­னார்.

திரு­வ­னந்­த­பு­ரம், எர்­ணா­குளம், திருச்­சூர், மலப்­பு­ரம் ஆகிய நான்கு மாவட்­டங்­களில் நிலைமை மோச­மாக இருப்­ப­தாக கவலை தெரி­வித்த அவர், அம்­மா­வட்­டங்­களில் 'முத்­த­டுப்பு' ஊர­டங்கு அம­லுக்கு வரு­வ­தாக தெரி­வித்­தார்.

தொற்­றுப்­ப­ர­வ­லைக் கட்­டுக்­குள் கொண்­டு­வர நான்கு மாவட்­டங்­க­ளி­லும் மிகக் கடு­மை­யான கட்­டுப்­பா­டு­கள் கொண்டு வரப்­படும் என்­றும் தற்­போது மேற்­கொள்­ளப்­படும் நட­வ­டிக்­கை­கள் தரும் பலனை தெரிந்­து­கொள்ள சில நாட்­கள் தேவைப்­படும் என்­றும் முதல்வர் பின­ராயி விஜ­யன் கூறி­னார்.

"மே மாதம் கேர­ளா­வுக்கு மிக முக்­கி­ய­மா­னது என மருத்­துவ நிபு­ணர்­கள் கூறி­யுள்­ள­னர். கடும் கட்­டுப்­பா­டு­க­ளு­டன் கூடிய ஊர­டங்­கு­தான் வட­ மா­நி­லங்­களில் கொரோனா தொற்று குறைய முக்­கி­யக் கார­ணம்.

"ஆனால் தென் ­மா­நி­லங்­களில் தொற்­றுப் பர­வல் தொடர்ந்து அதி­க­ரித்து வரு­கிறது. குறிப்­பாக கேர­ளா­வில் பாதிப்பு அதி­க­மாக உள்­ளது. இத­னால் வடஇந்­திய மாநி­லங்­கள் சந்­தித்த சூழலை கேர­ளா­வும் எதிர்­கொண்­டுள்­ளது. மக்கள் அரசுடன் ஒத்துழைக்க வேண்டும்," என்­றார் முதல்­வர் பினராயி விஜ­யன்.