73 கிராமங்களை புரட்டிப்போட்ட புயல்

73 கிராமங்களை புரட்டிப்போட்ட புயல்

1 mins read
1847bd42-31a6-451b-9b63-4cc864bf973c
-

பெங்­க­ளூரு: டவ் தே புய­லின் தீவி­ரம் கார­ண­மாக கர்­நா­ட­கா­வில் 73 கிரா­மங்­கள் சின்­னபின்­ன­மா­கின. கேர­ளா­வில் இரு­வர் கன­ம­ழைக்­குப் பலி­யாகி உள்­ள­னர்.

தற்­போது இந்­தப் புயல் வடக்கு நோக்கி நகர்­வ­தால் கர்­நா­ட­கா­வில் கட­லோர மாவட்­டங்­க­ளி­லும் குஜ­ராத்­தி­லும் கன­மழை பெய்து வரு­கிறது.

அண்­மை­யில் அர­பிக்­க­ட­லில் உரு­வா­னது டவ் தே புயல். இதன் தாக்­கத்­தால் ஐந்து மாநி­லங்­களில் கன­மழை பெய்­யும் என வானிலை ஆய்வு மையம் எச்­ச­ரித்­தி­ருந்­தது. நேற்று முன்­தி­னம் கேரளா கர்­நா­டகா உள்­ளிட்ட மாநி­லங்­களில் மழை கொட்­டித் தீர்த்­தது.

கேர­ளா­வில் மழை கார­ண­மாக பல்­வேறு பகு­தி­களில் கடும் வெள்­ளப்­பெ­ருக்கு ஏற்­பட்­டது. ஏரா­ள­மான மரங்­களும் மின்­கம்­பங்­களும் சாய்ந்­தன.

எர்­ணா­கு­ளம் கோழிக்­கோடு மாவட்­டங்­களில் தலா ஒரு­வர் மழைக்­குப் பலி­யா­கி­னர். ஒன்பது மாவட்­டங்­க­ளுக்கு கன­ம­ழைக்­கான சிவப்பு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டது.

அங்கு மழை நீடித்­து­வ­ரும் நிலை­யில் கர்­நா­ட­கா­வி­லும் கோரத்­தாண்­ட­வ­மா­டி­யது டவ் தே புயல். அங்கு 73 கிரா­மங்­கள் கன­ம­ழை­யால் கடும் சேதங்­களை எதிர்­கொண்­டுள்­ளன. ஏரா­ள­மான வீடு­கள் வெள்­ளத்­தில் அடித்­துச் செல்­லப்­பட்­டன.

டவ் தே புயல் மேலும் தீவி­ர­ம­டை­யும் என்­றும் வடக்கு நோக்கி நகர்ந்து இன்று குஜ­ராத் கட­லோ­ரப் பகு­தி­க­ளைத் தாக்­கும் என்­றும் வானிலை ஆய்வு மையம் தெரி­வித்­துள்­ளது.