மேற்கு வங்கத்தில் ஊரடங்கு

மேற்கு வங்கத்தில் ஊரடங்கு

1 mins read
6f75338b-3e3e-4f5f-b216-2261865defc8
-

கோல்­கத்தா: கொரோனா கிரு­மித்­தொற்­றுப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்­தும் வித­மாக ஞாயிற்­றுக்­கி­ழமை தொடங்கி 15 நாள்­க­ளுக்கு முழு ஊர­டங்கு அமல்­ப­டுத்­தப்­படும் என மேற்கு வங்க அரசு அறி­வித்­துள்­ளது.

அங்கு நேற்று முன்­தி­னம் ஒரே­நா­ளில் சுமார் 20 ஆயி­ரத்­துக்­கும் அதி­க­மா­னோர் புதி­தாக தொற்­றுக்கு ஆளா­கி­யுள்­ள­னர். 136 பேர் பலி­யாகிவிட்­ட­னர். இதை­ய­டுத்து அங்கு 15 நாள் ஊர­டங்கு அம­லுக்கு வந்­துள்­ளது.

இக்­கா­ல­கட்­டத்­தில் அனைத்து அரசு, தனி­யார் அலு­வ­ல­கங்­கள், வணிக வளா­கங்­கள், பேரங்­கா­டி­கள், மதுக்­கூ­டங்­கள், அழகு நிலை­யங்­கள் என அனைத்­தும் மூடப்­பட்­டி­ருக்­கும். வாக­னப் போக்­கு­வ­ரத்து அனு­ம­திக்­கப்­ப­டாது. ரயில்­கள் இயக்­கப்­ப­டாது.

மின்­வ­ணி­கம், வீடு­க­ளுக்­கான அத்­தி­யா­வ­சி­யப் பொருட்­கள் விநி­யோ­கச் சேவை மட்­டும் அனு­ம­திக்­கப்­படும் என அம்­மா­நில அரசு தெரி­வித்­துள்­ளது.

இதற்­கி­டையே சட்­டீஸ்­கர் மாவட்­டத்­தி­லும் மே 31ஆம் தேதி வரை ஊர­டங்கு நீட்­டிக்­கப்­பட்­டுள்­ளது. அங்கு ஏற்­கெ­னவே கடந்த 4ஆம் தேதி முதல் 15ஆம் தேதி இரவு வரை ஊர­டங்கு அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.