சண்டிகர்: சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் இருந்து முட்டைகளைத் திருடிய தலைமைக் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
பஞ்சாப் மாநிலம் சண்டிகரைச் சேர்ந்தவர் பிரித்பால் சிங். காவல்துறையில் தலைமைக் காவலராகப் பணியாற்றிய அவர், நேற்று முன்
தினம் பதேதார் பகுதியில் போக்கு
வரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது சாலையோரம் நின்றிருந்த ஒரு முச்சக்கர வாகனம் அருகே சென்ற அவர், அதில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த முட்டைகளில் இருந்து சிலவற்றை எடுத்து தமது கால்சட்டைப் பையில் திணித்தார்.
அவர் முட்டை திருடுவதை கைபேசியில் காணொளியாகப் பதிவு செய்த ஒருவர் பின்னர் சமூக வலைத்தளத்தில் அதை வெளியிட, பிரித்பால் சிங்கின் செயலுக்கு பலர் கண்டனம் தெரிவித்தனர். இதை
யடுத்து நடைபெற்ற விசாரணைக்குப் பின்னர் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

