அமைச்சர்கள் இருவர் கைது; சிபிஐ நடவடிக்கைக்கு மம்தா பானர்ஜி எதிர்ப்பு

அமைச்சர்கள் இருவர் கைது; சிபிஐ நடவடிக்கைக்கு மம்தா பானர்ஜி எதிர்ப்பு

2 mins read
f8a3b1f3-160d-4673-8c3e-ac17578aec94
கோல்கத்தாவில் சிபிஐ அலுவலகத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மம்தா கட்சித் தொண்டர்கள். படம்: இந்திய ஊடகம் -

கோல்­கத்தா: மேற்கு வங்க மாநில அமைச்­சர்­கள் இரு­வரை சிபிஐ அதி­ர­டி­யாக கைது செய்­துள்­ளது.

லஞ்­சம், ஊழல் வழக்கு தொடர்­பாக இந்­ந­ட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்பட்­ட­தாக சிபிஐ தரப்­பில் கூறப்­படு­கிறது.

மாநில அமைச்­சர்­கள் இரு­வர் கைது செய்­யப்­பட்­ட­தற்கு அம்­மா­நில முதல்­வர் மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரி­வித்­துள்­ளார். வேண்டு­மா­னால் தம்மையும் கைது செய்­யட்­டும் என அவர் ஆவே­சத்­து­டன் கூறி­யுள்­ளார்.

நேற்று கோல்­கத்­தா­வில் உள்ள சிபிஐ அலு­வ­ல­கத்­துக்கு வெளியே திரி­ணா­மூல் காங்­கி­ரஸ் கட்­சித் தொண்­டர்­கள் திர­ளா­கக் கூடி ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர். இத­னால் அங்கு பதற்­றம் நில­வி­யது.

கடந்த 2014ஆம் ஆண்டு பிர­பல செய்தி நிறு­வ­னத்­தின் செய்­தி­யா­ளர் ஒரு­வர் தம்மை தொழி­ல­தி­பர் என்று அறி­மு­கப்­ப­டுத்­திக் கொண்டு திரி­ணா­முல் காங்­கி­ரஸ் அமைச்­சர்­கள் ஏழு பேரை அணு­கி­னார்.

மேற்கு வங்­கத்­தில் முத­லீடு செய்ய விரும்­பு­வ­தா­க­வும் அதற்கு உதவ ­வேண்­டும் என்றும் கேட்­டுக்­கொண்டு அமைச்­சர்­க­ளுக்கு அவர் லஞ்­சம் அளித்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

கடந்த 2016ஆம் ஆண்டு மேற்கு வங்­கத்­தில் சட்­டப்­பே­ர­வைத் தேர்­தல் நடந்­த­போது இந்த லஞ்ச விவ­கா­ரம் பெரி­தாக வெடித்­தது. எனி­னும் அத்­தேர்­த­லில் மம்தா கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்­தது.

இந்­நி­லை­யில் லஞ்­சம் பெற்­ற­தா­கக் குற்­றம்­சாட்­டப்­பட்ட சுப்­ரதா முகர்ஜி, பிர்­ஹாத் ஹக்­கீம் ஆகிய இரு­வ­ரும் இப்­போது மேற்கு வங்க அமைச்­சர்­க­ளாக உள்­ள­னர்.

இந்த லஞ்ச விவ­கா­ரம் தொடர்­பாக சிபிஐ விசா­ரணை மேற்­கொண்­டது.

இதை­ய­டுத்து இந்த வழக்­கில் நேற்று காலை இரு அமைச்­சர்­களும் கைது செய்­யப்­பட்­ட­னர். பின்­னர் திரி­ணா­மூல் காங்­கி­ரஸ் கட்­சி­யின் இரண்டு தலை­வர்­கள் விசா­ர­ணைக்­காக சிபிஐ அலு­வ­ல­கத்­திற்கு அழைத்­துச் செல்­லப்­பட்­ட­னர். இது­கு­றித்து அறிந்த முதல்­வர் மம்தா பானர்ஜி, கட்சி நிர்­வா­கி­க­ளு­டன் உட­ன­டி­யாக சிபிஐ அலு­வ­ல­கத்­துக்கு விரைந்­தார்.

அங்கு அதி­கா­ரி­க­ளு­டன் ஆவே­ச­மாக வாக்­கு­வா­தம் செய்த அவ­ரி­டம் விசா­ர­ணைக்­குப் பின்­னர் நான்கு பேரும் கைது செய்­யப்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

இத­னால் ஆவே­ச­ம­டைந்த முதல்­வர் மம்தா தனது கட்­சித் தலை­வர்­களைக் கைது செய்­வதாக இருந்­தால் தம்மை­யும் கைது செய்­ய­வேண்­டும் என கோபத்­து­டன் கூறி­னார்.