சுவரொட்டி ஒட்டிய 25 பேர் கைது; ராகுல் கண்டனம்

சுவரொட்டி ஒட்டிய 25 பேர் கைது; ராகுல் கண்டனம்

1 mins read
d9ebf194-0f14-4754-892a-2bfe7e784d18
-

புது­டெல்லி: மத்­திய அர­சுக்கு எதி­ராக சுவ­ரொட்டி ஒட்­டு­வ­து­கூட குற்­றச்­செ­ய­லா­குமா என காங்­கி­ரஸ் முன்­னாள் தலை­வர் ராகுல் காந்தி கேள்வி எழுப்­பி­யுள்­ளார்.

அண்­மை­யில் டெல்­லி­யின் பல்­வேறு பகு­தி­க­ளி­லும் பிர­த­மர் மோடி­யை­யும் மத்­திய அர­சை­யும் விமர்­சிக்­கும் வகை­யில் சுவ­ரொட்­டி­கள் ஒட்­டப்­பட்­டன.

'நம் குழந்­தை­க­ளுக்­குத் தேவைப்­படும் தடுப்­பூ­சி­களை ஏன் வெளி­நா­டு­க­ளுக்கு ஏற்­று­மதி செய்­தீர்­கள்?' எனும் வாச­கம் அவற்­றில் இடம்­பெற்­றி­ருந்­தது. இது­தொ­டர்­பாக டெல்லி போலி­சார் 25 பேரை கைது செய்­துள்­ள­னர்.

இந்­தக் கைது நட­வ­டிக்­கைக்கு காங்­கி­ரஸ் கட்சி கடும் கண்­ட­னம் தெரி­வித்­துள்­ளது. அந்­தச் சுவ­ரொட்­டியை தனது டுவிட்­டர் பக்­கத்­தில் பகிர்ந்த ராகுல் காந்தி, 'பிர­த­ம­ருக்கு எதி­ராக சுவ­ரொட்டி ஒட்­டி­யது குற்­றமா' என கேள்வி எழுப்பி உள்­ளார்.

"கொரோனா தொற்­றுக்கு மத்­தி­யில் நின்றுகொண்­டி­ருக்­கி­றோம். காவல்­து­றைக்கு வேறு வேலை இல்­லையா? நான் என் வீட்­டுச் சுவரில் இது­போன்ற சுவ­ரொட்­டி­களை ஒட்­டு­வேன். என்­னை­யும் கைது செய்­யுங்­கள்," என ராகுல்­காந்தி தமது பதி­வில் குறிப்­பிட்­டுள்­ளார்.