கறுப்புப் பூஞ்சை நோயால் பார்வைத்திறனை இழக்கும் ஆபத்து: மருத்துவர்கள் எச்சரிக்கை

கறுப்புப் பூஞ்சை நோயால் பார்வைத்திறனை இழக்கும் ஆபத்து: மருத்துவர்கள் எச்சரிக்கை

2 mins read
55baee49-567d-41d8-b9de-eb8c894199a6
-

நாக்­பூர்: கறுப்­புப் பூஞ்சை நோயால் பாதிக்­கப்­பட்ட சில­ருக்கு கண் பார்வை பறி­போ­ன­தாக வெளி­யான தக­வல் மகா­ராஷ்­டி­ரா­வில் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

மேலும், பார்வை இழந்­த­வர்­க­ளின் கண்­களை அகற்ற வேண்­டிய கட்­டா­யம் ஏற்­ப­டு­கிறது என மருத்­து­வர்­கள் கூறு­வ­தாக 'டைம்ஸ் ஆஃப் இந்­தியா' செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

நோய் அறி­கு­றி­களை சாதா­ர­ண­மாக எடுத்­துக்­கொள்­வ­தா­லும் நோய்த்­தொற்­றில் இருந்து விடு­பட உரிய மருந்­து­களை உட்­கொள்­ளா­த­தும் நிலை­மையை மோச­ம­டை­யச் செய்­வ­தாக மருத்­து­வர்­கள் கூறு­கின்­ற­னர்.

இது­வரை சுமார் 75 பேருக்கு கண்­கள் அகற்­றப்­பட்­டி­ருப்­ப­தா­க­வும், தற்­போது கறுப்­புப் பூஞ்சை நோயால் பாதிக்­கப்­ப­டு­வோ­ரின் எண்­ணிக்கை குறைந்து வரு­வ­தா­க­வும் அந்த ஊட­கச் செய்தி மேலும் தெரி­விக்­கிறது.

கொரோனா பாதிப்­பில் இருந்து விடு­படும் சில­ருக்கு கறுப்­புப் பூஞ்சை நோய்த் தாக்­கம் ஏற்­ப­டு­கிறது. பற்­கள், சைனஸ் பகு­தி­களை பாதிக்­கும் இந்­நோய் முற்­றிப்­போ­கும் பட்­சத்­தில் கண்­க­ளை­யும் தாக்­கு­கிறது.

பின்­னர் நரம்பு மண்­ட­லத்­தைப் பாதித்து ஒருவரது உயி­ருக்கே ஆபத்தை ஏற்­ப­டுத்­து­கிறது. பூஞ்சை நோய் முற்­றிப்­போ­கும் பட்­சத்­தில், கண்­களை முற்­றி­லு­மாக அகற்ற வேண்டி இருக்­கும் என்­றும் சில­ருக்கு ஒரு கண்ணை மட்­டும் அகற்­றி­னாலே போது­மா­னது என்­றும் மருத்­து­வர்­கள் தெரி­வித்­த­தாக ஊடகச் செய்தி­யில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில் நாடு முழு­வ­தும் கறுப்­புப் பூஞ்சை நோய் பரவி வரு­கிறது. மகா­ராஷ்­டி­ரா­வில் நூற்­றுக்­க­ணக்­கா­னோர் பாதிக்­கப்­பட்­டுள்ள நிலை­யில் இந்­நோய்க்­குப் பலி­யா­வோ­ரின் எண்­ணிக்­கை­யும் அதி­க­ரித்­துள்­ளது. மகா­ராஷ்­டி­ராவை அடுத்து கர்­நா­டகா, கேரளா, தமி­ழ­கம், ஆந்­திரா உள்­ளிட்ட மாநி­லங்­க­ளி­லும் கறுப்­புப் பூஞ்சை நோய் பர­வி­யி­ருப்­ப­தாக ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

கர்­நா­ட­கா­வில் பூஞ்சை நோய் பாதிப்பு கார­ண­மாக இரு தினங்­க­ளுக்கு முன் மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்ட 14 பேரில் இருவர் இறந்­துவிட்டனர்.

கேர­ளா­வில் ஏழு பேருக்கு இந்­நோய் இருப்­பது உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

அவுரங்காபாத் நகரில் 16 பேர் இந்நோய்க்குப் பலியாகி உள்ளனர்.

இந்நிலையில் உரிய சிகிச்சை பெற்றால் பூஞ்சை நோயில் இருந்து எந்த பாதிப்பும் இன்றி குணமடையலாம் என மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனாவைத் தொடர்ந்து கறுப்புப் பூஞ்சை நோயும் மக்களை அச்சுறுத்தி வருகிறது.