டெல்லி, மகாராஷ்டிர மாநிலங்களில் தொற்று பாதிப்பு குறைகிறது

டெல்லி, மகாராஷ்டிர மாநிலங்களில் தொற்று பாதிப்பு குறைகிறது

2 mins read
b97e6c3e-5207-40fa-ad85-3f4d4ed2c561
-

புது­டெல்லி: டெல்­லி­யில் கொரோனா தொற்­றுப்­ப­ர­வல் குறைந்து வரு­வ­தாக அம்­மா­நில முதல்­வர் அர­விந்த் கெஜ்­ரி­வால் தெரி­வித்­துள்­ளார்.

எனி­னும் அங்கு அம­லில் உள்ள ஊர­டங்கு நீடிக்­கும் என்­றும் அவர் அறி­வித்­துள்­ளார்.

கொரோனா இரண்­டா­வது அலை டெல்­லி­யைப் புரட்­டிப் போட்டு வரு­கிறது. அங்கு நாள்­தோ­றும் ஆயி­ரக்­க­ணக்­கா­னோர் தொற்­றுப் பாதிப்­பால் அவ­திப்­பட்டு வந்­த­னர். இதை­ய­டுத்து அங்கு ஊர­டங்கு உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டது.

இந்­நி­லை­யில் ஒரு மாதத்­துக்­குப் பிறகு தொற்­றுப் பர­வல் விகி­தம் டெல்­லி­யில் 11 விழுக்­கா­டாக குறைந்­துள்­ளது. எனி­னும் கொரோ­னா­வுக்கு எதி­ரான போராட்­டம் நீடிக்­கும் என்­றார் முதல்­வர் கெஜ்­ரி­வால்.

இரு­தி­னங்­க­ளுக்கு முன்பு அங்கு அன்­றாட தொற்று எண்­ணிக்கை 10,489ஆக பதி­வா­னது. எனி­னும் நேற்று முன்­தி­னம் சுமார் ஆறா­யி­ரம் பேருக்கு மட்­டுமே புதி­தாக கிருமி தொற்­றி­யுள்­ளது.

தொற்று எண்­ணிக்கை படிப்­ப­டி­யா­கக் குறைந்­து­வ­ரு­வது மகிழ்ச்சி அளிப்­ப­தா­கக் குறிப்­பிட்­டுள்ளமுதல்­வர் கெஜ்­ரி­வால், இவ்­வேளை­யில் யாரும் கவ­னக்­கு­றை­வாக இருந்­து­வி­டக் கூடாது என்­றார்.

"தொற்று மீண்­டும் அதி­க­ரிக்­கா­மல் இருக்க, இறை­வனை வேண்­டிக் கொள்­வோம். முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யாக கொரோனா நோயா­ளி­க­ளுக்­கென புதி­தாக 500 அவ­சர சிகிச்­சைப் படுக்­கை­கள் தயார்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. வீட்­டில் தங்கி சிகிச்சை பெறும் நோயா­ளி­க­ளுக்கு உயிர்­வாயு கிடைக்க உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது," என்­றார் முதல்­வர் கெஜ்­ரி­வால்.

டெல்­லி­யில் நேற்­று­டன் ஊர­டங்கு முடி­வுக்கு வரும் என அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. எனி­னும் 24ஆம் தேதி வரை அது நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதற்­கி­டையே மகா­ராஷ்­டி­ரா­வி­லும் தொற்­றுப் பாதிப்பு குறை­யத் தொடங்கி உள்­ளது. அங்கு நேற்று முன்­தி­னம் 26,616 பேருக்கு புதி­தாக கிருமி தொற்­றிய நிலை­யில், அன்­றைய தினம் 48,211 பேர் குணமடைந்ததாக சுகா­தார துறை தெரி­வித்­துள்­ளது.

அங்கு தினந்­தோறும் 60 ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்­ட­வர்­கள் பாதிக்­கப்­பட்டு வந்த நிலை­யில் அந்த எண்­ணிக்கை பாதிக்­கும் கீழ் சரிந்­துள்­ளது.