மிசோராமில் தஞ்சம் புகுந்த 15,000 மியன்மார் குடிமக்கள்

மிசோராமில் தஞ்சம் புகுந்த 15,000 மியன்மார் குடிமக்கள்

1 mins read
900bfa7a-50e9-4c92-9468-eecaae6ee0d0
-

அய்சால்: மியன்­மா­ரைச் சேர்ந்த 15 ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்­டோர் இந்­தி­யா­வின் எல்­லை­யோர மாநி­ல­மான மிசோ­ரா­மில் அடைக்­க­லம் புகுந்­துள்­ள­னர்.

அந்­நாட்­டில் நிலைமை மோச­மடைந்து வரும் நிலை­யில், எல்லை கடப்­போ­ரின் எண்­ணிக்கை மேலும் அதி­க­ரிக்­கும் என எதிர்­பார்க்­கப்­படு­கிறது என ராய்ட்­டர்ஸ் செய்தி முகமை தெரி­வித்­துள்­ளது.

கடந்த பிப்­ர­வரி 1ஆம் தேதி மியன்­மா­ரில் ராணு­வப் புரட்சி வெடித்­ததை அடுத்து மறு­தி­னமே அந்­நாட்­டுக் காவல்­து­றை­யைச் சேர்ந்த சிலர் நாட்டை விட்டு வெளி­யே­றி­னர்.

கடந்த ஏப்­ரல் மாதத்­தில் சுமார் 1,800 பேர் எல்லை கடந்த நிலை­யில், அண்­மைய நாட்­களில் ஒட்­டு­மொத்த எண்­ணிக்கை 15,400ஆக அதி­க­ரித்­துள்­ளது.

இத்­த­க­வலை மிசோ­ராம் மாநில திட்ட வாரி­யத் தலை­வ­ரான ரம்­மாவி தெரி­வித்­துள்­ளார்.

"மிசோ­ராம் மாநில தலை­ந­க­ரில் மட்­டும் 6 ஆயி­ரம் மிசோ­ராம் குடி­மக்­கள் உள்­ள­னர்.

"மற்­ற­வர்­கள் மாநி­லத்­தின் இதர ஐந்து மாவட்டங்களில் அடைக்­க­லம் புகுந்­துள்ளனர்," என்று ரம்­மாவி மேலும் தெரிவித்ததாக 'ராய்ட்டர்ஸ்' செய்தி முகமை கூறியுள்ளது.