பெங்களூரு: கர்நாடக மாநிலத்தின் கிராமப்புறங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் அம்மாநிலம் தடுப்பூசிப் பணியை முடுக்கிவிட்டுள்ளது.
2021 அக்டோபர், நவம்பர் மாதங்களுக்குள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்று அம்மாநிலத்தின் சுகாதார அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார்.
இரண்டு கோடி 'கொவிஷீல்டு' தடுப்பூசி கொள்முதல் செய்ய அம்மாநிலம் ஒப்பந்தம் செய்துள்ளது. இதில் இதுவரை 2 லட்சம் தடுப்பூசி கர்நாடகத்திற்கு வந்துள்ளது. மத்திய அரசிடம் இருந்து ஒரு கோடியே 11 லட்சத்து 26,000 தடுப்பூசிகளைப் பெற்றுள்ளது. அத்துடன் நேரடியாக 9.50 லட்சம் தடுப்பூசி கொள்முதல் செய்துள்ளது.
இதுவரை 1,13,61,234 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. கோவேக்சின், ஸ்புட்னிக் தடுப்பூசிகள் கர்நாடகத்திலேயே உற்பத்தி செய்ய இருப்பதாகவும் அமைச்சர் சுதாகர் தெரிவித்தார்.

