டெஹல்கா முன்னாள் தலைமை ஆசிரியர் பாலியல் வழக்கிலிருந்து விடுவிப்பு

டெஹல்கா முன்னாள் தலைமை ஆசிரியர் பாலியல் வழக்கிலிருந்து விடுவிப்பு

2 mins read
fef69a18-23c2-4342-b219-a4482906801e
நீதிமன்றத் தீர்ப்பை கேட்க தனது மனைவியுடன் நீதிமன்றத்துக்கு வந்த டெஹல்கா முன்னாள் தலைமை ஆசிரியர் தருண் தேஜ்பால். படம்: ஏஎஃப்பி -

பனாஜி: 'டெஹல்கா' நிறு­வ­ன­ரும் முன்­னாள் தலைமை ஆசி­ரி­ய­ரு­மான தருண் தேஜ்­பாலை பாலி­யல் வழக்­கி­லி­ருந்து கோவா நீதி­மன்­றம் விடு­வித்­துள்­ளது.

கடந்த 2013ஆம் ஆண்­டில் கோவா­வில் உள்ள ஐந்து நட்­சத்­திர ஹோட்­ட­லில் கருத்­த­ரங்­கம் நடை­பெற்­ற­போது அதில் பங்­கேற்ற சக பெண் ஊழி­யரை பாலி­யல் வன்­கொ­டுமை செய்­த­தாக அவர் மீது குற்­றச்­சாட்டு எழுந்­தது.

இதை­ய­டுத்து அவர் கைது செய்­யப்­பட்­டார்.

பின்­னர் 2014ல் இந்த வழக்­கில் அவ­ருக்கு நீதி­மன்­றம் பிணை வழங்­கி­யது.

2017ஆம் ஆண்­டில் பாலி­யல் பலாத்­கா­ரம், பாலி­யல் தொல்லை, சட்­ட­வி­ரோ­த­மாக தடுத்து வைத்­தது உள்­ளிட்ட பிரி­வு­களில் நீதி­மன்­றத்­தில் அவர் மீது குற்­றப்­பத்­தி­ரிகை தாக்­கல் செய்­யப்­பட்­டது.

இதற்­கி­டை­யில், தனக்கு எதி­ரான வழக்கை ரத்து செய்­யக்­கோரி தருண் தேஜ்­பால் மும்பை உயர் நீதி­மன்­றத்­தில் முறை­யிட்­டார்.

ஆனால், இந்த முறை­யீட்டை மும்பை உயர் நீதி­மன்­றம் நிரா­க­ரித்­தது. இதன்­பி­றகு, உச்ச நீதி­மன்­றத்­தில் மேல் முறை­யீடு செய்­தார். உச்ச நீதி­மன்­றம் இந்த வழக்கை கோவா நீதி­மன்­றம் தொடர்ந்து விசா­ரிக்க உத்­த­ர­விட்­டது. இதன்­படி, இந்த வழக்கு விசா­ரணை கோவா மாவட்ட நீதி மன்­றத்­தில் நடை­பெற்று வந்­தது. இந்த நிலை­யில், மேற்­கூ­றிய வழக்­கில் இருந்து தருண் தேஜ்­பாலை விடு­வித்து கோவா நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டுள்­ளது. நீதி­மன்­றத் தீர்ப்­புக்­குப் பிறகு தருண் தேஜ்­பா­லின் மகள் கேரா தேஜ்­பால் தந்தை சார்­பாக அறிக்கை ஒன்றை வாசித்­தார்.

அதில், "பாலி­யல் வன்­கொ­டுமை செய்­த­தாக பொய்­யாக குற்­றம் சாட்­டப்­பட்­டி­ருந்­த­தாக அவர் தெரி வித்தார்.

"நீதி­மன்­றத்­தின் சார்­பற்ற, நேர்­மை­யான விசா­ரணை மற்­றும் கண்­கா­ணிப்பு கேம­ராக்­கள் தீர ஆராய்ந்து வழங்­கப்­பட்ட தீர்ப்­புக்கு ஆழ்ந்த மரி­யா­தையை தெரி­வித்­துக் கொள்­கி­றேன்," என்­று தருண் தேஜ்­பால் கூறியிருந்­தார்.

கிரு­மித் தொற்­றால் உயி­ரி­ழந்த தமது வழக்­க­றி­ஞர் ராஜீவ் கோம சுக்­கும் அவர் நன்றி கூறி­னார்.