புதிய தொற்று 2.59 லட்சமாக குறைந்தது

புதிய தொற்று 2.59 லட்சமாக குறைந்தது

2 mins read
3c9d01d8-1383-48d4-90bc-a39b902efae0
-

புது­டெல்லி: இந்­தி­யா­வில் புதிய தொற்­றுச் சம்­ப­வங்­கள் குறைந்து உள்­ளன.

கிரு­மிப் பர­வல் 2ஆம் அலை­யின் தாக்­கத்தை சமா­ளிக்க மத்­திய, மாநில அர­சு­கள் கடு­மை­யாக போராடி வரு­கின்­றன.

நோய்த்­தொற்று அதி­கம் உள்ள மாநி­லங்­களில் முழு ஊர­டங்கு, இரவு நேர ஊர­டங்கு மற்­றும் பல்­வேறு கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப் பட்­டுள்­ளன.

இதன் கார­ண­மாக நாள்­தோ­றும் நோய்த்­தொற்­று­க­ளின் எண்­ணிக்கை 4 லட்­சம் என்ற உச்­சத்­தில் இருந்து படிப்­ப­டி­யாக குறைந்து வரு­கிறது.

குண­ம­டை­வோ­ரின் எண்­ணிக்­கை­யும் அதி­க­ரித்து வரு­கிறது என்று மாலை­ம­லர் வெளி­யிட்ட தக­வல் தெரி­விக்­கிறது.

இந்­நி­லை­யில் கொரோனா பாதிப்பு நில­வ­ரம் குறித்து மத்­திய சுகா­தார அமைச்சு அறிக்கை வெளி­யிட்­டுள்­ளது.

அதன்­படி இந்­தி­யா­வில் கடந்த 24 மணி நேரத்­தில் 259,591 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. மொத்த பாதிப்பு 2,60,31,991 ஆக உயர்ந்­துள்­ளது.

நாடு முழு­வ­தும் ஒரே நாளில் 4,209 பேர் கொரோ­னா­வுக்கு பலி­யா­கி­யுள்­ள­னர். இதன்­மூ­லம் கிரு­மித் தொற்­றால் இது­வரை உயி­ரி­ழந்­த­வர்­க­ளின் மொத்த எண்­ணிக்கை 291,331 ஆக உயர்ந்­துள்­ளது.

முந்­தைய நாள் உயி­ரி­ழப்பு 3,874 ஆக இருந்த நிலை­யில், தற்­போது 4,000 தாண்டியுள்­ளது.

கொரோனா பாதிப்­பில் இருந்து குண­ம­டைந்­த­வர்­க­ளின் எண்­ணிக்கை 2,27,12,735 ஆக உயர்ந்­துள்­ளது.

நேற்று முன்­தி­னம் ஒரே நாளில் 357,295 பேர் குண­ம­டைந்­துள்­ள­னர். உயி­ரி­ழப்பு 1.12 விழுக்­கா­டாக அதி­க­ரித்­துள்­ளது. குண­ம­டை­யும் விகி­தம் 87.25 விழுக்­கா­டாக உயர்ந்­துள்­ளது.

சிகிச்சை பெறு­வோர் எண்­ணிக்கை 30.27 லட்­ச­மாக குறைந்­துள்­ளது. நாடு முழு­வ­தி­லும் உள்ள பல்­வேறு மருத்­து­வ­ம­னை­களில் 30,27,925 பேர் சிகிச்சை பெற்­று­ வ­ரு­கின்­ற­னர்.

நாடு முழு­வ­தும் நேற்று முன்தினம் வரை பொது­மக்­க­ளுக்கு 19,18,79,503 முறை தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ளன.