அமிர்தசரஸ்: இந்திய விமானப் படைக்குச் சொந்தமான 'மிக்-21' ரக போர் விமானம் விபத்துக்கு உள்ளானதில் அதன் விமானி உயிரிழந்தார்
பஞ்சாப் மாநிலம் மோகா அருகே நேற்று முன்தினம் இரவு பயிற்சியில் ஈடுபட்டு இருந்தபோது விமானம் விபத்துக்குள்ளானது. இதில் விமானி அபினவ் சவுத்ரி பலி யானார்.
விமானியின் உயிரிழப்புக்கு இந்திய விமானப்படை இரங்கல் தெரிவித்துள்ளது.
"பயிற்சியை முடித்துக்கொண்டு சுரத்கார்குக்கு விமானம் திரும்பி கொண்டிருந்தபோது மோகா என்ற இடத்தில் விபத்து ஏற்பட்டது," என்று விமானப்படை அதிகாரிகள் தெரிவித்ததாக 'த இந்தியன் எக்ஸ்பிரஸ்' குறிப்பிட்டது.
விபத்து பற்றி கேள்வியுற்றதும் உள்ளூர் போலிஸ்காரர்களும் விமானப் படை அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். நான்கு மணி நேர தேடலுக்குப் பிறகு விமானியின் உடல் மீட்கப்பட்டது.
விபத்து நிகழ்ந்த இடத்தி லிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் அவரது உடல் கண்டு பிடிக்கப்பட்டது.
இந்த விபத்தில் வேறு யாரும் காயம் அடையவில்லை என்று அதி காரிகள் கூறினர்.
பாரசூட் ஒன்றும் திறந்து காணப்பட்டது. பாரசூட்டை பயன்படுத்தி விமானி பாதுகாப்பாக தரையிறங்க முயற்சி செய்துள்ளார். ஆனால் அவரது கழுத்து, முதுகெலும்பு முறிந்து அவர் உயிரிழந்தார். அவர் தன்னிடம் இருந்த சாதனத்தின் மூலம் அவசர அழைப்பும் விடுத்தார் என்று தெரிகிறது.
விபத்து குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த வருடத்தில் மட்டும் மிக்-21 போர் விமானங்கள் தொடர்பான மூன்றாவது விபத்து இது.

