மீண்டும் புயல் எச்சரிக்கை

மீண்டும் புயல் எச்சரிக்கை

2 mins read
138e5c7e-d1cc-4b6d-b7eb-22c52231cfc2
-

புது­டெல்லி: இந்­தி­யா­வில் மீண்­டும் புயல் எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்டு உள்­ளது. சில நாட்­க­ளுக்கு முன்­பு­தான் டவ்டே புயல் வட ­மா­நி­லங்­களை சூறை­யா­டி­யது.

அது ஏற்­ப­டுத்­திய பாதிப்­பி­லி­ருந்து மீள்­வ­தற்­குள் மற்­றொரு காற்­ற­ழுத்த தாழ்வு மண்­ட­லம் உரு­வா­கி­யி­ருப்பதாக இந்­திய வானிலை ஆய்வு மையம் அறி­வித்­துள்­ளது.

"வடக்கு அந்­த­மான் கட­லில் இன்று ஒரு புதிய காற்­ற­ழுத்த தாழ்வு பகுதி உரு­வாக உள்­ளது. இது 24ஆம் தேதி புய­லாக வலு­வ­டைந்து வட­மேற்கு திசை­யில் நக­ரக்­கூ­டும்," என்று மையம் தெரி­வித்­துள்­ளது.

26ஆம் தேதி காலை­யில் ஒடிசா-மேற்கு வங்­கா­ளம் இடையே புதிய புயல் கரையை கடக்­கும் என கணிக்­கப்­பட்­டுள்­ளது. இதன் கார­ண­மாக கட­லோர மாவட்­டங்­களில் கன­ம­ழைக்கு வாய்ப்பு உள்­ளது. இதை­ய­டுத்து, ஆந்­திரா, ஒடிசா, தமிழ்­நாடு, மேற்கு வங் காளம் ஆகிய மாநி­லங்­களில் உள்ள கட­லோர மாவட்­டங்­களில் போதிய சுகா­தார முன்­னெச் சரிக்கை நட­வ­டிக்­கை­களை உடன டியாக மேற்­கொள்­ளும்­படி மத்­திய அரசு அறி­வு­றுத்தி உள்­ளது. அந்­த­மான் தீவு­க­ளி­லும் முன்­னெச்ச ரிக்கை நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள அறி­வு­றுத்­தப்­பட்டு உள்­ளது.

இதற்­கி­டையே நான்கு மாநில தலை­மைச் செய­லா­ளர்­கள் மற்­றும் அந்­த­மான் நிகோ­பார் தீவு நிர்­வாகி ஆகி­யோ­ருக்கு மத்­திய சுகா­தார அமைச்­சின் செய­லா­ளர் ராஜேஷ் பூஷன் கடி­தம் அனுப்பி உள்­ளார்.

அதில், புயல் பாதிப்பு உள்ள இடங்­களை கண்­ட­றிந்து, அங்­குள்ள கொரோனா சிறப்பு முகாம்­களில் உள்ள நோயா­ளி­களை மீட்டு வேறு முகா­மிற்கு மாற்ற வேண்­டும். கட­லோர மாவட்­டங்­களில் சுகா­தார வச­தி­கள் தயார் நிலை­யில் இருக்க வேண்­டும். மருத்­து­வ­ம­னை­களில் மின்­சா­ரம், தண்­ணீர், எரி­பொ­ருள் தடை­யின்றி கிடைப்­பதை உறுதி செய்ய வேண்­டும் என்று தெரி­விக்­கப் பட்­டுள்­ளது.